1. சாக வேண்டிய என்னை, ஜனங்கள் காப்பாற்றினர் - நான் யார்?
யோனத்தான் (14:43-45)
2. யோனத்தானுக்கு கண் தெளிவடைந்தது எதனால்?
தேனை ருசிபார்த்ததினால் (14:29)
3. சவுலின் நாட்களில் கர்த்தரின் ஆசாரியனாயிருந்தது யார்?
அகியா (14:3,18,19)
4. பெயர் சொல்லப்பட்ட பாறைகள் எவை?
போசேஸ், சேனே (14:4)
5. கீஸின் சகோதரன் யார்?
நேர் (14:50,51,9:1)
6. "எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்" - யார், யாரிடம் சொன்னது?
தாணையம்.இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து. 1சாமுவேல் - 14:12
7. எந்த இடத்திலிருந்து எந்த இடமட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்?
மிக்மாசிலிருந்து ஆயலோன் மட்டும். 1சாமுவேல் - 14:31
8. பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பி விட்டது யார்?
சவுல். 1சாமுவேல் - 14:46
No comments:
Post a Comment