Search This Blog

Tuesday 3 November 2015

வேதாகமத்தில் அதிக தடவைகள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்


☀ தாவீது என்ற பெயர் 1118 தடவைகள்
☀ மோசே என்ற பெயர் 740 தடவைகள்
☀ ஆரோன் என்ற பெயர் 339தடவைகள்
☀ சவுல் என்ற பெயர் 338 தடவைகள்
☀ ஆபிரகாம் என்ற பெயர் 306 தடவைகள்
☀ சாலொமோன் என்ற பெயர் 295 தடவைகள்
☀ யாக்கோபு என்ற பெயர் 270 தடவைகள்
☀ யோசேப்பு என்ற பெயர் 208 தடவைகள்
☀ யோசுவா என்ற பெயர் 197 தடவைகள்
☀ பவுல் என்ற பெயர் 185 தடவைகள்
☀ பேதுரு என்ற பெயர் 166 தடவைகள்
☀ யோபு என்ற பெயர் 137 தடவைகள்
☀ எரேமியா என்ற பெயர் 136 தடவைகள்
☀ சாமுவேல் என்ற பெயர் 135 தடவைகள்
☀ ஈசாக்கு என்ற பெயர் 127 தடவைகள்

★ நம்முடைய கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

✍ குறிப்பு: இது மூல ஆதாரத்தில் இருந்து தமிழில்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Wednesday 7 October 2015

பைபிளில் சொல்லப்படுவது உண்மைதான்

பைபிளில் சொல்லப்படுவது உண்மைதான் - நாசா ஆராட்சி கூடம் அதிரடி..!

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
யூதர் மற்றும் கிறித்துவர்களின் புனித நூலான பைபிள், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815-ஆம் ஆண்டிற்குப் பின்பு சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு நூல்..! நாசாவின் சமீபத்திய ஆய்வின் மூலம் பைபிளில் கூறப்படும் கதைகள் எல்லாமே உண்மை என்று உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..!

விண்வெளி நிலை :
100 மற்றும் 1000 ஆண்டுகளாய் என்ற இடைவெளியில் சூரியன், சந்திரன் உட்பட பல கிரகங்களின் விண்வெளி நிலைகளை (positions of several space objects) பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு :
நமது பூமி கிரகம் பிற விண்வெளி பொருட்களோடு மோதல் நிகழத்தாமல் இருக்குமா என்றவொரு விண்வெளி ஆய்வுதான் இது.

நேரம் :
சுற்றுப்பாதையில் எல்லாமே நேரத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், விண்வெளி நிகழ்வுகளில் தத்தம் போக்கில் செல்லும் பொருட்களுக்கு எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது.

ஸ்தம்பித்தது :
அம்மாதிரியான ஆய்வின் கணினி கணக்கீடுகளின் போது ஏற்பட்ட ஒரு சிவப்பு சமிக்ஞை மூலம் ஒட்டுமொத்த ஆய்வுமே ஸ்தம்பித்தது. அதாவது கிரங்களின் விண்வெளி நிலை ஆய்வில் ஏதாவது ஒரு தரவு அல்லது ஒரு முடிவோ தவறாகி விட்டது என்று அர்த்தம்..!

கடந்துவிட்ட நேரம் :
சேவை துறை தலையீட்டுக்குப் பிறகு, கடந்துவிட்ட நேரத்தில் (elapsed time) எங்கோ ஒரு விண்வெளி நாளில் குறிப்பிட்ட நேரம் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகான அர்த்தம் :
இந்த பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாத நிலையில் பைபிள் வாசகம் ஒன்று இதற்கு தீர்வாய் அமைந்தது. யோசுவாவின் புத்தகத்தில் உள்ள வரியில் இந்த பிரச்னைக்கான அழகான அர்த்தம் கிடைத்தது.

இருள் கவிழ்ந்தால் :
யோசுவா 10: 8-ல் எதிரிகள் சூழப்பட யோசுவா கவலை கொள்கிறான். இருள் கவிழ்ந்தால் தான் தோற்கப் பெறுவேன் எனவே சூரியனை நிற்க செய்ய வேண்டும் என்று யோசுவா கடவுளிடம் கேட்டார். அப்படியாகவே நிகழ்ந்தது.
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா. அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல்முழுவதும் நடுவானத்தில் நின்றது. (யோசுவா 10 :13)

காணாமல் போன நாள் :
இதனை தொடர்ந்து விண்வெளி நேரத்தில் காணாமல் போன நாள் இதுவாகத் தான் இருக்கலாம் என்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்தனர்.

முழு நாள் :
இந்த முடிவைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட கணினி கணக்கீடு ஆய்வில் 23 மணி நேரம் 20 நிமிடங்கள் காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டது, அதாவது யோசுவா புத்தகத்திலுள்ளது போன்றே கிட்டத்தட்ட முழு நாள், ஆனால் முழு நாள் இல்லை..!

40 நிமிடங்கள் :
அந்த மீதமுள்ள 40 நிமிடங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது 1000 ஆண்டுகள் என்று நிகழ்த்தப்படும் அளவீட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கும் ஆகையால் மீண்டும் பைபிள் வரிகள் பரிந்துரைக்கப்பட்டன.

பின்னோக்கி போன சூரியன் :
பின்னர் சூரியன் பின்னோக்கி போன குறிப்பு பைபிளில் இருந்துள்ளது. யாரும் முதலில் அதை நம்பவில்லை ஆனால் பின்னர் வேறு வழியின்றி அதை கணக்கிட்டு பார்த்துள்ளனர்.

பத்து டிகிரி :
எசேக்கியாவின் மரணப்படுக்கையில் விஜயம் செய்த ஏசாயா இது தனக்குரிய நேரமில்ல்லை என்று கூற சூரியன் 10 டிகிரி முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பத்து டிகிரி பின்னோக்கி செல்ல வேண்டுமா என்று கேட்க எசேக்கியா பின்னோக்கி என்று கூறியுள்ளார். அவ்வாறே சூரியன் 10 டிகிரி பின்னோக்கி செல்ல செய்யப்பட்டுள்ளது..!

40 நிமிடங்கள் :
10 டிகிரி என்றால் சரியாக 40 நிமிடங்கள் ஆகும். அப்படியாக விண்வெளி நேரத்தில் காணாமல் போன ஒரு முழு நாளின் கணக்கை பைபிள் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

முழுமை :
அதாவது விண்வெளி நாட்களில் காணாமல் போன அந்த முழுநாள் ஆனது 23 மணி நேரம் 20 நிமிடங்கள் (யோசுவாவிற்காக ) எனவும், 40 நிமிடங்கள் (எசேக்கியா மற்றும் ஏசாயாவிற்காக ) எனவும் முழுமையடைகிறது..!
ஆமென் அல்லேலூயா

Tuesday 18 August 2015

வேதம் காட்டிய அறிவியல்..


*பைபிள் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:*

➡அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் - தானி12:4.
➡அதிவேக வாகனங்கள் - நாகூம்2:4.
➡ரோபோ - யோவேல்2:7.
➡மழை பெய்யும் முறையில் - யோபு26:8,36:27,சங்135:7.
➡கொள்ளை நோய்  - லேவி26;25,உபா28:21,சங்78:50.
➡அந்தரத்தில் தொங்கும் பூமி - யோபு26:7.
➡பூமியின் வடிவம் உருண்டை  - ஏசா40:22.
➡மனிதன் பூமியில் மட்டுமே வாழ முடியும்  - ஒபதியா1:4, ஏசா45:18, சங்115:16, ஏசா14:13, ஆமோ9:2.
➡உறுதியான சந்திரன் - சங்89:37.
➡காலக்குறிப்புக்காக சந்திரன் - சங்104:19.
➡மண்ணிலிருந்து வந்தவன் மனிதன் - ஆதி2:7,8,1:27.
➡நிலப்பரப்பைவிட கடல் பெரியது - சங்104:25.
➡இசைபாடும் எண்ணற்ற விண்மீன்கள் - யோபு38:7 எரே33:22.
➡உலகின் மையப்பகுதி - ஆதி28:14,எசே38:10
➡காற்றுக்கு நிறை ஜலத்திற்கு அளவு - யோபு28:25.
➡அணுக்களிள் கூட்டமைப்பே அனைத்தும் - எபி11:3.
➡குடும்ப கட்டுப்பாடு - உபா23:1.
➡மயக்கமருந்து - ஆதி2:21.
➡கருக்கலைப்பு(இந்த வசனத்தில் ஊசி வில்லு என தீ.தரிசனமாக குறிப்பிடப்பட்டுள்ளது) - ஏசா13:18.
➡உயிர் ரத்தத்தில் உள்ளது - லேவி17:11,எபி9:22.
➡JCB - ஏசா41:15.
➡நிலக்கரி(diamond) - யோபு28:5.
➡மோப்ப நாய் - எரே51:3.
➡உலகிலேயே ருசியில்லாத பதார்த்தம் - யோபு6:6.
➡மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கடல் வற்றிப்போகும் என்ற தீ.தரிசனம் - எரே51:36.
➡பூமி 231/2டிகிரி சாய்வாக சுற்றுகிறது - யோபு12;15.
➡கடலுக்குள் மலைகள் - யோனா2:5,6.
➡விரிவடையும் வானம் - யோபு9:8, ஏசா42:5, எரே51:15.
➡சூறாவளி காற்று - பிரசங்கி1:6.
➡AC - நியா3:20, எரே36:22.
➡பூமியில் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக 38Y குரோமோசோம்கள் உள்ளது - அப்17:26 (1995ஆம் ஆண்டு Edwin happil என்ற அறிஞர் இதை கண்டுபிடித்தார்).
➡register office - ஏசா32:44.
➡ஈய எழுத்துக்கள் - யோபு19:24.
➡மகிழ்ச்சி மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது - நீதி17:22 (மாற்கு14:34).
➡ஒவ்வொரு உயிர்களுக்கும் மாம்சத்தின் மூலக்கூறு வெவ்வேறு - 1கொரி15:39-41.
➡உலக சரித்திரத்தின் ஒரேயொரு நீண்ட நாள் மற்றும் அதன் கணக்கு சரிகட்டப்பட்டது - யோசு10:13,14 2இரா20:11.
➡பிற பறவைகள் மிருகங்களின் இயல்புகள் - யோபு39. நீதி30:24-28, எரே8.
➡கடைசி காலம் - 2தீமோ3ம் அதிகாரம்.
➡அந்தி கிறிஸ்து - 2தெச2, வெளி17:11-13.
➡சமாதானமின்மை - எரே6:14, 30:5, எசேக்13:10, 1தெச5:3.
➡உணவு மற்றும் தண்ணீர் பஞ்சம் மற்றும் தண்ணீரை பணத்தைக் கொண்டு வாங்கும் நிலை - எசேக்4:17, புல5:4.
கட்டுக்கதைக்கும் பொய்க்கும் செவிசாய்க்கும் காலம் - ஏசா30:10, 2தீமோ4:3,4.
➡ஓரிணச்சேர்க்கை - ரோமர்1:26-28.
➡சுணாமி - லூக்21:25, ஏசா51:15, எரே31:35.
➡பெருவெள்ளமாக மக்களை அடித்து கொண்டு போகும் மழை - எசேக்38:22.
➡இரத்தம் அக்கினி புகை அடையாளம்  - யோவேல்2:30.
➡பண ஆசை அதிகரிக்கும் - 2தீமோ3:2.
➡பரியாசக்காரர்கள் அதிகரிப்பார்கள் - 2பேது3:3,4, யூதா8.
➡பாலுறவு குற்றங்கள் - வெளி9:21.
➡துர்உபதேசம் - 1தீமோ4:1-3.
சூரிய வெப்பம் அதிகரிக்கும் - வெளி16:8,9.
➡அணுகுண்டுகளால் எற்படும் நாசங்கள் - சக14:12.
➡உலகை இணைக்கும் தொலைதொடர்பு சாதனங்கள் - வெளி11:9.
➡கள்ளப்போதகர்கள் - 2பேது2:1,2.
➡அதிகரிக்கும்
போர்கள் பஞ்சங்கள் கொள்ளை நோய்கள் பூமி அதிர்ச்சிகள் - மத்24:6-8.
➡வானத்தில் பற்பல அடையாளங்கள் - லூக்21:11.
➡உலகளாவிய போர்கள் - யோவேல்3:9, மத்24:7, வெளி16:14.
➡ஆனாலும் பொய்யான சமாதானம் - எரே6:14, எசேக்13:10, 1தெச5:3.
➡பலர் தங்களை கடவுளின் அவதாரம் என்பார்கள் - மத்24:5, லூக்21:8. 

இன்னும் பல உள்ளது சகோதரர்களே. வேதாகமம் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல.. ஆனால், அது அறிவியலின் அடித்தளம். இன்றுவரை நிறைவேறும் தீர்க்கதரிசன நூல்! கிறிஸ்துவின் வருகைக்கு நம்மை ஆயத்தப்படச்சொல்லும் ஆசிரியர்! உலகமே அழிந்தாலும் வேதவார்த்தை அழியாது. நாமும் அழியாது, பெருவாழ்வு வாழ, வேதவார்த்தைக்கே கீழ்ப்படிதல் அவசியம்! ஆமென்!