வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Thursday 31 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
1. இஸ்ரவேல் குமாரரின் நாமங்கள் எங்கே பதிக்கப்பட வேண்டும்?
பொன் குவளைகளில் (39:6)
2. பரிசுத்த கிரீடத்தில் எழுதப்பட்டது என்ன?
கர்த்தருக்குப் பரிசுத்தம் (39:30)
Wednesday 30 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
1. வாசஸ்தலத்துப் பொருட்கள் எண்ணிக் கொடுக்கப்பட்டது யாரிடம்?
இத்தாமார் (38:21)
2. வலைப்பின்னல் போன்று செய்யப்பட்டது என்ன?
வெண்கலச் சல்லடை (38:4)
3. பரிசுத்த வேலைக்கென்று கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, வெண்கல அளவுகள் எவ்வளவு?
பொன் - 29 தாலந்தும் 730 சேக்கல் நிறை, வெள்ளி - 100 தாலந்தும் 1775 சேக்கல் நிறை, வெண்கலம் - 70 தாலந்தும், 2400 சேக்கல் நிறை (38:24,25,29)
Tuesday 29 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
1. குத்துவிளக்கின் கிளைகள் மற்றும் அகல்களின் எண்ணிக்கை எத்தனை?
ஆறு கிளைகள், ஏழு அகல்கள் (37:18,23)
2. கிருபாசனத்தை செய்தது யார்?
பெசலெயேல் (37:1-6)
3. மேஜையின் அளவுகள் என்ன?
இரண்டு முழ நீளம், ஒரு முழ அகலம், ஒன்றரை முழ உயரம் (37:10)
4. தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக செய்யப்பட்டவை எவை?
அபிஷேகதைலம், தூபவர்க்கம் (37:29)
Monday 28 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
1. விநோத நெசவுவேலையாக செய்யப்பட்டது என்ன?
கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகள் (36:8)
2. பலகைக்கு, சம தூரமான அளவில் இருந்தவை எவை?
இரண்டு கழுந்துகள் (36:22)
3. பலகைகளின் நடுவில் உருவப்பாயும்படி செய்யப்பட்டது என்ன?
நடுத்தாழ்ப்பாள் (36:33)
4. வாசஸ்தல மேற்கூடாரம் போட செய்யப்பட்ட மூடுதிரைகளின் எண்ணிக்கை எத்தனை?
பதினொரு (36:14)
Sunday 27 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
1. போதிக்கும் வரம் எவர்களுக்கு அருளப்பட்டது?
பெசலெயேல், அகோலியாப் (35:30-34)
2. சமைக்கக் கூடாத நாள் எது?
ஓய்வுநாள் (35:3)
3. ஞான எழுப்புதலடைந்த பெண்கள் செய்தது என்ன?
வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள் (35:26)
4. இரத்தின கற்களை கொண்டு வந்தவர்கள் யார்?
பிரபுக்கள் (35:27)
5. கர்த்தரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவனின் தந்தை யார்?
ஊரி (35:30)
Saturday 26 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
1. மோசேயுடன் சீனாய் மலையில் ஏறிப்போனவர்கள் எத்தனை பேர்?
ஒருவருமில்லை (34:2-5)
2. கர்த்தரின் சந்நிதியில் மோசே முக்காடு அணிந்திருந்தாரா?
இல்லை (34:34)
3. பண்டிகை கொண்டாட வேண்டிய மாதம் எது?
ஆபீப் (34:18)
4. மோசே மலையிலிருந்த நாட்கள் எத்தனை?
நாற்பது நாள் (34:28)
5. வருடத்தில் 3 முறை கர்த்தரின் சந்நிதியில் வர வேண்டியவர்கள் யார்?
ஆண்மக்கள் எல்லாரும் (34:23)
6. கர்த்தரின் நாமம் என்ன?
எரிச்சலுள்ள தேவன் (34:14)
Friday 25 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
1. மோசே கர்த்தரிடம் காண்பிக்க சொன்னது என்ன?
கர்த்தரின் மகிமையை (33:18)
2. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றது எது?
மேகஸ்தம்பம் (33:9)
3. கர்த்தர் மோசேயை எதினால் மூடுவதாக சொன்னார்?
கரத்தினால் (33:22)
4. ஆபரணங்கள் கழற்றி போடப்பட்ட இடம் எது?
ஓரேப் மலையருகே (33:6)
Thursday 24 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
1.கர்த்தரின் புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படும் பெயர் யாருடையது?
கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தவனின் பெயர் (32:33)
2. எரிக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, தூவப்பட்டு, குடிக்கப்பட்டது என்ன?
கன்றுக்குட்டி (32:20)
3. சிற்பக்கலைஞான ஆசாரியன் யார்?
ஆரோன் (32:4)
4. லேவியர் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3000 பேர் (32:28)
5. தன் இன ஜனத்துக்காக கர்த்தரிடம் மன்றாடியவன் யார்?
மோசே (32:11-14,32)
Wednesday 23 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
1. சாட்சிப் பலகைகள் எதினால் எழுதப்பட்டிருந்தது?
தேவனுடைய விரலினால் (31:18)
2. கர்த்தருக்கு செலுத்த வேண்டிய கேராவின் அளவு எது?
அரைச்சேக்கல் = 10 கேரா (1 சேக்கல் = 20 கேரா) - (31:13)
3. தேவாவியினால் நிரப்பப்பட்டது யார்?
பெசலெயேல் (31:2-5)
Tuesday 22 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
1. ஒரு குடத்தின் அளவு எடுக்க சொன்னது என்ன?
ஒலிவ எண்ணெய் (30:24)
2. இதை செலுத்துவதில் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் வித்தியாசமில்லை - எதை?
பாவநிவாரணப் பணம் - அரை சேக்கல் (30:15)
3. மோசே செய்கிற முறைப்படி எதை செய்யக்கூடாது என்றார்?
தூபவர்க்கத்தை (30:37)
4. வருஷம் ஒரு தரம் பிராயச்சித்தம் பண்ண வேண்டியது எதன்மேல்?
தூபபீடத்தின் கொம்புகளின்மேல் (30:10)
Monday 21 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
1. கர்த்தரின் சந்நிதி எதினால் பரிசுத்தமாகும்?
கர்த்தரின் மகிமையினால் (29:42,43)
2. சகோதரனால் ஆசாரிய அபிஷேகம் செய்யப்பட்டது யார்?
ஆரோன் (29:5-7)
3. பரிசுத்தமானவைகளை புசிப்பவர்கள் யார்?
ஆரோனும் அவன் குமாரரும் (29:32,33)
4. கைகளை வைக்க வைக்க, அடிக்கப்பட்டவை எவை?
காளை, 2 ஆட்டுக்கடா (29:3,10,11,15,16,19,20)
5. இதை தொட்டால் பரிசுத்தம் - எதை?
பலிபீடத்தை (29:37)
6. அடை பண்ண வேண்டிய மாவு எது?
கோதுமை மாவு (29:2)
Sunday 20 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
1. 🛎, கனி - இவை தொங்க வேண்டியது எங்கே?
அங்கியின் ஓரங்களில் (28:34)
2. இஸ்ரவேல் குமாரரின் நாமங்களை எங்கே பதிக்க வேண்டும்?
பொன் குவளைகளில் (28:11)
3. பரிசுத்தமானவைகளின் தோஷத்தை சுமப்பது யார்?
ஆரோன் (28:38)
4. இஸ்ரவேல் குமாரரிலிருந்து, பிரிக்கப்படும் குமாரர்கள் யார்?
ஆரோனின் குமாரர்கள் - 4 பேர் (28:1)
5. 🔲,✌🏻,🤙🏻,🤙🏻, - இவை எதனுடைய அளவுகள்?
நியாயவிதி மார்ப்பதக்கம் (28:15,16)
6. நியாயவிதி மார்ப்பதக்கத்தில் வைக்க வேண்டிய இரண்டு எவை?
ஊரீம் தும்மீம் (28:30)
7. சத்தம் கேட்கவில்லையென்றால், சாவு - யாருக்கு?
ஆரோன் (28:35)
Saturday 19 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
1. குத்துவிளக்கிற்கு தேவையான எண்ணெய் எது?
ஒலிவ எண்ணெய் (27:20)
2. பலிபீடத்தின் பாதி உயரத்தில் இருக்கும்படி, வைக்க வேண்டியது என்ன?
வெண்கலச் சல்லடை (27:4,5)
3. 1⃣0⃣0⃣,5⃣0⃣, 5⃣ - முழ அளவுகள் எதனுடையது?
பிரகாரம் (27:18)
4. 🥄🥄 - இவை செய்யப்படுவது எதனால்?
வெண்கலத்தால் (27:3)
Friday 18 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
1. இருஸ்தலங்களுக்கும் பிரிவுண்டாக்குவது எது?
திரைச்சீலை (26:33)
2. சித்தீம் மர பலகைக்கு🧱 இருக்க வேண்டியது என்ன?
இரண்டு கழுந்துகள் (26:17)
3. காதுகளை எதனால் உண்டுபண்ண வேண்டும்?
இளநீலநூலால் (26:4)
Thursday 17 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் சொன்ன காணிக்கைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
16 (25:3-7)
2. மேஜையின் மேல் வைக்க வேண்டியது என்ன?
சமுகத்தப்பங்கள் (25:30)
3. பெட்டியிலிருந்து எதை கழற்றக்கூடாது?
தண்டுகள் (25:15)
4. சித்தீம் மரப்பெட்டியில் வைக்க வேண்டியது என்ன?
சாட்சிப்பிரமாணம் (25:10,16)
Wednesday 16 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
1. மோசே வாசித்த புஸ்தகம் எது?
உடன்படிக்கையின் புஸ்தகம் (24:7)
2. மோசே நாட்டின தூண்கள் எத்தனை?
பன்னிரண்டு (24:4)
3. ☁ - 🤓🦮 மலையை எத்தனை நாள் மூடியிருந்தது?
ஆறு நாள் (24:16)
4. கர்த்தருக்கு பலி செலுத்தியவர்கள் யார்?
இஸ்ரவேல் புத்திரரின் வாலிபர் (24:5)
Tuesday 15 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
1. குருடராக்குவது எது?
பரிதானம் (23:8)
2. கர்த்தர் யாரை நீதிமானென தீர்ப்பதில்லை?
துன்மார்க்கனை (23:7)
3. யாரை கோபப்படுத்தக் கூடாது?
தூதனை (23:20,21)
4. யார் பெயரை சொல்லக்கூடாது?
அந்நிய தேவர்களின் (23:13)
5. அந்நிய ஜாதிகளை துரத்த கர்த்தர் அனுப்புவது என்ன?
குளவிகள் (23:28)
Monday 14 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
1. பீறுண்டவைகளுக்காக ஒப்புவிக்க வேண்டியது என்ன?
சாட்சியை (22:13)
2. நம் நாட்டின் ஜனாதிபதியை சபிக்கலாமா?
சபிக்க கூடாது (22:28)
3. யாரை உயிரோடு வைக்கக்கூடாது?
சூனியக்காரியை (22:18)
4. எவர்களை ஒடுக்கும் சத்தம் கேட்டால், கர்த்தர் கொலையாளியாவார்?
விதவை, திக்கற்றப்பிள்ளை (22:22-24)
Sunday 13 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
1. அடித்தாலும், சபித்தாலும் மரணம் நிச்சயம் - எவர்களை?
தகப்பன், தாய் (21:15,17)
2. நான் மனுஷனைக் கொன்றால், என் எஜமானுக்கு சாவு உறுதி - நான் யார்?
முட்டுகிற மாடு (21:29)
3. விடுதலையாக மனமில்லாதவனுக்கு, குத்த வேண்டியது எதை?
காதை (21:5,6)
Saturday 12 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
1. புகைந்தது எது?
மலை (20:18)
2. யாரைக் குறித்து 3⃣ - ம்,4⃣ - ம் தலைமுறையிலும் விசாரணை நடக்கும்?
கர்த்தரைப் பகைக்கிறவர்களைக் (20:5)
3. யார் தண்டனைக்கு தப்புவதில்லை?
கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குகிறவன் (20:7)
4. எங்கு படிகள் மேல் ஏறிப்போகக் கூடாது?
பலிபீடத்தின் மேல் (20:26)
Friday 11 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
1. தொட்டால் சாவு - எதை?
மலை (19:12)
2. ஏறின என்னை இறங்கச்சொல்லி, வேறொருவருடன் வர கட்டளைப் பெற்றேன் - யாருடன்?
ஆரோனுடன் (19:24)
3. கர்த்தர்✝ இஸ்ரவேலரை எப்படி சுமந்தார்?
கழுகுகளுடைய செட்டைகளின்மேல் (19:4)
4. 🤓🦮 - இம்மலையில் கர்த்தர் இறங்கும் நாள் எது?
3-ம் நாள் (19:11)
5. ஜனங்களின் கீழ்ப்படிதலுக்கு சாட்சி சொன்னவன் யார்?
மோசே (19:23)
Thursday 10 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
Wednesday 9 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
1. மோசே கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன?
யேகோவாநிசி (17:15)
2. சுதந்திரம் பெற்ற இஸ்ரவேலர் முதன்முதலில் யுத்தம் பண்ணினது யாரோடு?
அமலேக்கியரோடு (17:8-10)
3. இஸ்ரவேலர் யார் மேல் கல் எறிய பார்த்தார்கள்?
மோசே (17:4)
Tuesday 8 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
1. விடியற்காலத்தில் காண்பது என்ன?
கர்த்தருடைய மகிமை (16:7)
2. இஸ்ரவேலர் மன்னாவை சாப்பிட்ட காலம் எவ்வளவு?
நாற்பது வருஷம் (16:35)
3. இரட்டிப்பு சேமிப்பு - எந்நாளில்?
ஆறாம் நாளில் (16:5,22)
4. அப்பம் காணப்படாத நாள் எது?
ஏழாம் நாளாகிய ஓய்வுநாளில் (16:26)
5. அப்பம் அளக்கப்பட்ட அளவின் பெயர் என்ன?
ஓமர் (16:18)
Monday 7 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
1. எகிப்தியரை விழுங்கியது எது?
பூமி (15:12)
2. கரைவது யார்?
கானானின் குடிகள் யாவரும் (15:15)
3. எதிரிகள் அமிழ்ந்ததாக சொல்லப்பட்டது எவைகளைப் போல?
கல், ஈயம் (15:5,10)
4. இஸ்ரவேலர் தண்ணீரில்லாமல் இருந்த நாட்கள் எத்தனை?
மூன்று நாள் (15:22)
5. பாடகியான தீர்க்கத்தரிசி யார்?
மிரியாம் (15:21,22)
6. ஜலம் குவிந்தது எதினால்?
கர்த்தரின் நாசியின் சுவாசத்தினால் (15:8)
7. ஏலிமின் சிறப்பு எவை?
12 நீரூற்றுகள், 70 பேரீச்சமரங்கள் (15:27)
Sunday 6 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
1. கடலின் நடுவில் அழிக்கப்பட்டது யார்?
இஸ்ரவேலரை பின்தொடர்ந்த எகிப்தியர் (14:27,28)
2. சாவதை விட எது நலம் என இஸ்ரவேலர் கூறினர்?
எகிப்தியருக்கு வேலைசெய்கிறது (14:12)
3. இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுவது யார்?
கர்த்தர் (14:14)
4. கர்த்தர் மோசேயிடம் எதை பிளக்க சொன்னார்?
சமுத்திரத்தை (14:16)
5. இரு சேனைகளுக்கும் நடுவே வந்தது எது?
மேகஸ்தம்பம் (14:19,20)
Saturday 5 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
1. எத்தேச வழியாய், கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்தவில்லை?
பெலிஸ்தரின் (13:17)
2. இஸ்ரவேலரிடமிருந்து விலகாதவை எவை?
மேகஸ்தம்பம், அக்கினிஸ்தம்பம் (13:22)
3. இஸ்ரவேலர் சுதந்திரம்🇮🇱 பெற்ற மாதத்தின் பெயர் என்ன?
ஆபிப் (13:4)
4. எகிப்திலிருந்து மோசே கொண்டு போனது என்ன?
யோசேப்பின் எலும்புகள் (13:19)
5. அடிமைத்தன வீடு எது?
எகிப்து (13:3)
Friday 4 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
1. i) எல்லார் வீட்டிலும் சாவு - *எங்கே?*
எகிப்தில் (12:30)
2. *யார் மேல்* நீதி செலுத்தப்படும்?
எகிப்து தேவர்களின்மேல் (12:12)
3. ஒரே பிரமாணம் *எவர்களுக்கு?*
சுதேசி, பரதேசி (12:49)
4. *எதை* சாப்பிட்டால் மரணம் நிச்சயம்?
புளித்த அப்பம் (12:15,19)
5. *எந்நாளில்* தெரிந்து கொண்டதை *எந்நாளில்* (தேதி) சாப்பிட வேண்டும்?
10-ம் தேதி, 14-ம் தேதி (12:3-8)
6. இஸ்ரவேலர் தோளின் மேல் கொண்டுபோனது *என்ன?*
பிசைந்தமா இருந்த பாத்திரம் (12:34)
7. இரத்தத்தை தெளிக்க பயன்படுத்தப்பட்டது *எது?*
ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்து (12:29)
8. 7⃣ நாள் சாப்பிட வேண்டியது *என்ன?* தேதி *குறிப்பிடுக?*
புளிப்பில்லா அப்பம், முதலாம் மாதம் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை (12:15,18)
Thursday 3 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
1. உக்கிர கோபத்தோடு😡 புறப்பட்டது *யார்?*
மோசே (11:8)
2. மிகப் பெரியவன்🕺 *யார்?*
மோசே (11:3)
Wednesday 2 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
1. *யாரைக்* கண்டால்🤓 மோசேக்கு சாவு?
பார்வோன் (10:28)
2. துரத்திவிடப்பட்ட🏌🏻♂ சகோதரர்கள் *யார்?*
மோசே, ஆரோன் (10:8-11)
3. எகிப்தியர் குருடாயிருந்த👨🦯👩🦯 நாட்கள் *எத்தனை?*
மூன்று நாள் (10:23)
4. கர்த்தர் வீசப்பண்ணின காற்றுகள்🌬 *எவை?*
கீழ்க்காற்று, மேல்காற்று (10:13,19)
5. 🦗🦗 - இவை *எதை* மூடியது?
பூமியின் முகம் முழுவதையும் (10:15)
Tuesday 1 March 2016
யாத்திராகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
1. அழிவிற்கு தப்பின தானியப்பயிர்கள் எவை?
கோதுமை, கம்பு (9:32)
2. மரணத்திற்கு தப்பினவை எவை?
இஸ்ரவேலரின் மிருகஜீவன்கள் (9:7)
3. வேகமாய் தரையில் ஓடியது எது?
அக்கினி (9:23)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)