Search This Blog

Sunday 4 September 2011

வேதாகம பயணம்

நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் ,   எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த நேரத்தில் யோசுவா , நியாயாதிபதிகளின்  அழகிய கதவில் நின்றபடி ரூத் என்பவள்"சாமுவேல் , சாமுவேல் " என்று சத்தமாக அழைத்துக் கொண்டிருந்த போது அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். 
      

ஒரு கட்டத்தில், முதலாம் ராஜாக்களும் , இரண்டாம் ராஜாக்களுமாய் இருந்த , நாளாகமங்களின் ராஜாக்கள், எஸ்றாவையும் , நெகேமியாவையும் , எஸ்தரையும், அவர்களது சகோதரன் யோபு அடைந்திருந்த துரதிருஷ்டமான நிலைமையின் நிமித்தமாக சந்திக்க வந்து கொண்டிருந்தனர். 
          

அவர்கள் சங்கீதம் பாடத்தொடங்கியபடிக் குழந்தைகளுக்கு நீதிமொழிகளைப் பிரசங்கித்து சாலமோனின் உன்னதப்பாட்டைக் கற்பித்தனர்.
        

இதே கால கட்டத்தில் சக நிகழ்வாக,  ஏசாயா, எரேமியாவின் புலம்பலை, 
எசேக்கியேல், தானியேல், ஓசியா , யோவேல் என்ற நண்பர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஆமோஸும் , ஒபதியாவும் அருகில் இல்லை. 


        மூன்று நாட்களுக்குப் பிறகு யோனா , மீகாவும், நாகூமும் எருசலேமுக்குப் பயணம் செய்த கப்பலிலேயே பயணித்தார். ஆபகூக் , அதன் பிறகு செப்பனியாவை சந்திக்க, அவர் ஆகாய் எனப்பட்ட சகரியாவின் நண்பரும் , மல்கியாவின் ஒன்று விட்ட சகோதரரும் ஆனவரை அறிமுகப் படுத்தினார். 


            உடனடியாக சம்பிரதாயப்படி, மத்தேயு , மாற்கு , லூக்கா, யோவான் என்பவர்கள், அப்போஸ்தலருடைய நடபடிகளின்படி , ரோமர், Iகொரிந்தியர் போல நடந்து கொள்ளுவதில் கவனம் செலுத்தினர். ஏனென்றால் IIகொரிந்தியர் கூட்டத்தினர் எப்பொழுதும் கலாத்தியரிடம் சண்டையிடுபவர்களாக இருந்தனர். 


           அந்த நேரத்தில் அவர்கள் உணர்ந்து கொண்டதாவது, எபேசியரும் , பிலிப்பியரும் கொலோசேயருக்கு நெருக்கமானவர்கள் என்பதும் , முதலாம் தெசொலேனிக்கேயர் சந்திப்புக்குப் பிறகு இரண்டாம் தெசொலேனிக்கேயர் சந்திப்பு வருவதற்குள் அவர்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு சகோதரர்களை சந்திக்கும்படி அறிவுறுத்தப் பட்டார்கள். அவர்களோ தீத்துவின் வீட்டிற்கு , அவர்களின் தம்பி பிலமோனுக்கு எபிரேயர் மொழியை எழுதவும் , படிக்கவும் கற்பிக்கப் போயிருந்தனர். 


           இதனைக் கேள்விப்பட்ட யாக்கோபு , இரண்டுமுறை பேதுருவிடம் விளக்கும்படி கேட்டுக் கொண்ட காரியம் , மூன்று யோவான்களும் யூதாவிடம் தங்கள் பயணத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தைப் பகிர்ந்து கொண்டார் என்பதுவே.


No comments:

Post a Comment