பிலிப்பி பட்டணம் பெயர் காரணம் என்ன?
மக்கெதேனியா நாட்டு அரசனும் மகா அலெக்சாண்டரின் தந்தையுமான பிலிப்பு இந்த நகரை கட்டியதால் இது அவருடைய பெயராலேயே பிலிப்பி பட்டணம் என்று அழைக்கப்பட்டது. கி.மு.168ல், இப்பட்டணம் ரோமரின் ஆதிக்கத்துக்குட்பட்டது. கி.பி.42க்கு பின் நடைபெற்ற சண்டைக்குப் பின் பிலிப்பி, ரோமர் குடியேறிய பட்டணமாக மாறியது. பிலிப்பி, மக்கெதோனியா தேசத்தின் நாடுகளில் முக்கியமான பட்டணங்களுள் ஒன்றாகும். அப்போஸ்தலர் நடபடிகள் 16:12ஐ வாசிக்கவும். பவுல் தமது இரண்டாவது மிஷினெரிப் பயணத்தின் போது இப்பட்டணத்திற்கு வந்து ஊழியம் செய்தார்.
No comments:
Post a Comment