பர்னபாவின் இயற்பெயர் யோசே என்பதாகும். சீப்புருத் தீவை செர்ந்த இவர் லேவிக்கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் துவக்க காலத்தில் தனக்கென்று வைத்திருந்த நிலத்தை விற்று அப்போஸ்தலருக்கு கொடுத்திருந்தார். பவுல் மனம் திரும்பி அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து கொள்ள வந்தபோது அவரைக்கு குறித்து அவர்கள் பயந்திருந்ததினால் அவரை சேர்த்துக்கொள்ள மனதாயில்லாதிருந்த போது பர்னபாதான் அவர்களது பயத்தைப் போக்கி பவுலை அப்போஸ்தலர்களுடன் ஒப்புரவாக்கி சேர்த்துக் கொள்ளும்படிச் செய்தார். மாற்குவைப் பற்றி பர்னபாவுக்கும், பவுலுக்கு உண்டான வாக்குவாதத்திற்குப்பின் இருவரும் சேர்ந்து தேவப்பணி செய்யவில்லையாயினும், பர்னபாவைப் பற்றி பவுல் தன் நிருபங்களில் மிக உயர்வாகவே எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment