Search This Blog

Sunday, 31 July 2011

மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலையும்

மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலையும் பற்றி கூறுக.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தேவன் மோசேக்கு காண்பித்து அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தில் பிரகாரம், வாசஸ்தலம், மகாபரிசுத்த ஸ்தலம் என்ற மூன்று முக்கியமான பகுதிகள் இருந்தன.மகாபரிசுத்த ஸ்தலம் என்கின்ற பகுதி, கூடாரத்தின் மேற்குப் பகுதியில் 15 அடி X 15 அடி X 15 அடி அளவில் திரைச் சீலைக்குப் பின்னாக அமைந்திருந்த பகுதி. இது தேவன் வாசம் செய்யும் இடத்திற்கு அடையாளமாக விளங்கியது. வருடத்திற்கு ஒரு முறைமட்டும் இதன் உள்ளே பிரதான ஆசாரியன் செல்லுவான். இதில் தான் உடன்படிகை பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. சித்திர வேலைகளான திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையிலே இருந்தது. கிறிஸ்து சிலுவையில் மரித்த போது தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. தேவனிடத்தில் சேர நமக்கு வழி ஏற்பட்டது. எபிரெயர் 9ம் அதிகாரத்தைப் படித்துப்பாருங்கள்

Friday, 29 July 2011

பர்னபா

பர்னபாவின் இயற்பெயர் யோசே என்பதாகும். சீப்புருத் தீவை செர்ந்த இவர் லேவிக்கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் துவக்க காலத்தில் தனக்கென்று வைத்திருந்த நிலத்தை விற்று அப்போஸ்தலருக்கு கொடுத்திருந்தார். பவுல் மனம் திரும்பி அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து கொள்ள வந்தபோது அவரைக்கு குறித்து அவர்கள் பயந்திருந்ததினால் அவரை சேர்த்துக்கொள்ள மனதாயில்லாதிருந்த போது பர்னபாதான் அவர்களது பயத்தைப் போக்கி பவுலை அப்போஸ்தலர்களுடன் ஒப்புரவாக்கி சேர்த்துக் கொள்ளும்படிச் செய்தார். மாற்குவைப் பற்றி பர்னபாவுக்கும், பவுலுக்கு உண்டான வாக்குவாதத்திற்குப்பின் இருவரும் சேர்ந்து தேவப்பணி செய்யவில்லையாயினும், பர்னபாவைப் பற்றி பவுல் தன் நிருபங்களில் மிக உயர்வாகவே எழுதியுள்ளார்.

Thursday, 28 July 2011

நான்கு சுவிசேஷங்களிலும்

நான்கு சுவிசேஷங்கள் பற்றிய குறிப்புகள்

நான்கு சுவிசேஷங்களிலும் மொத்தம் 89 அதிகாரங்கள் உள்ளன. அதில் 4 அதிகாரங்கள் அவருடைய முதல் 30 வருட வாழ்க்கையைப் பற்றியும், 85 அதிகாரங்கள் அவருடைய 3 வருட வாழ்க்கையைப் பற்றியும் 28 அதிகாரங்கள் அவருடைய கடைசி 8 நாள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன.

Wednesday, 27 July 2011

எஸ்ரா

எஸ்ரா என்றால் என்ன?


எஸ்ரா என்றால் 'உதவியாளர்' என்று பொருள். பாரம்பரியத்தின் படி வேதாகம புத்தகத்தில் எஸ்ரா என்ற நூலின் தலைமை பாத்திரமாக (Chief Character of the book) விளங்குகின்றான் ( எஸ்ரா 7:1,11,25,28, 8:15,16,17,21) .இவன் ஆரோனின் வழி வந்தவன். செரெயா என்பவனின் மகன் ( 7:1). திருமறையை ஆராய்ந்தவன். போதகன். இவன் இறைவனுக்குக் கீழ்படிதலுள்ள ஒரு சிறந்த கடவுள் மனிதன் ( 7:10). யூதர்களின் தலைவன்.பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து, அர்த்தசஷ்டா மன்னனின் காலத்தில் கி.மு.458 - ஆண்டு யூத மக்களை தலைமை தாங்கி எருசலேமுக்கு திரும்பிக் கொண்டு வந்தவன். இவன் காலத்தில் யூதமக்கள் பாபிலோனிய மன்னனின் தயவு பெற்று விளங்கினார்கள்.

Tuesday, 26 July 2011

அல்பா, ஓமெகா

அல்பா, ஓமெகா என்றால் என்ன?


வேதத்தில் நான்கு இடங்களில் அல்பா, ஓமெகா என்ற பதங்கள் காட்டப்பட்டுள்ளன. ( வெளி 1:8,1:11, 21:6,22:13 ). அதென்ன அல்பா, ஓமெகா?. அல்பா என்பது கிரேக்க மொழியுள்ள எழுத்துகளில் முதலாவது எழுத்தாகும். முதலெழுத்து மட்டுமல்ல. இது உயிரெழுத்தும் கூட. தமிழில் 'அ' என்பது போல. இது எபிரெய முதலெழுத்தான 'ஆலெப்' என்பதிலிருந்து மருவி வந்தது. ஓமெகா என்பது கிரேக்க மொழியின் கடைசி எழுத்து. முதலும் முடிவும் என்பதை குறிப்பிடவே அல்பா ஓமெகா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Monday, 25 July 2011

பிலிப்பி பட்டணம்

பிலிப்பி பட்டணம் பெயர் காரணம் என்ன?


மக்கெதேனியா நாட்டு அரசனும் மகா அலெக்சாண்டரின் தந்தையுமான பிலிப்பு இந்த நகரை கட்டியதால் இது அவருடைய பெயராலேயே பிலிப்பி பட்டணம் என்று அழைக்கப்பட்டது. கி.மு.168ல், இப்பட்டணம் ரோமரின் ஆதிக்கத்துக்குட்பட்டது. கி.பி.42க்கு பின் நடைபெற்ற சண்டைக்குப் பின் பிலிப்பி, ரோமர் குடியேறிய பட்டணமாக மாறியது. பிலிப்பி, மக்கெதோனியா தேசத்தின் நாடுகளில் முக்கியமான பட்டணங்களுள் ஒன்றாகும். அப்போஸ்தலர் நடபடிகள் 16:12ஐ வாசிக்கவும். பவுல் தமது இரண்டாவது மிஷினெரிப் பயணத்தின் போது இப்பட்டணத்திற்கு வந்து ஊழியம் செய்தார்.

Sunday, 24 July 2011

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி என்பதன் விளக்கம் என்ன?

தீர்க்கதரிசி - எபிரேய மொழியில் மூன்று சொற்கள்

1. நபி (Nabi ) - இச்சொல் திருமறையில் முந்நூறு முறைக்கும் அதிகமாக வருகிறது. தமிழ் திருமறையில் தீர்க்கதரிசி என்று மொழிபெயர்த்திருக்கும் இச்சொல்லின் மூலப்பொருள் தெரிவிக்கிறவன் அல்லது கூறுகிறவனாக இருக்கலாம்.

2. ரோகே (Roeh) - இச்சொல் திருமறையில் ஒன்பது முறை வருகிறது. இதன் மூலப்பொருள் காண்கிறவன் என்பதாகும். இச்சொல் திருமறையில் தமிழ்மொழியில் ஞான திருட்டிக்காரன் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

3. கோசே (Chozeh) : இச்சொல் திருமறையில் இருபது முறை வருகிறது. இதற்கு உரைக்கிறவன் என்று பொருள். இச்சொல் தமிழ்த் திருமறையில் ஞானதிருட்டிக்காரன் என்றும், தரிசனம் பார்க்கிறவன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Saturday, 23 July 2011

லூக்கா

லூக்கா என்பது யார்?

பவுலின் கண்டிப்பான உபதேசங்களை பின்பற்ற முடியாதவர்களாய் அநேகர் அவரை விட்டு விலகிப்போனார்கள். 1திமோ 1:20, 2 தீமோ 1:15, 2:17, 4:10,20. ஆகிலும் லூக்கா போன்றவர்கள் அவரை விட்டு விலகாமல் அவரோடு இணைந்திருந்தது மாத்திரமல்ல. ஒரு உண்மை தேவ ஊழியனாய் விளங்க பண்ணினான். அவன் யூத மார்க்கத்தை சேர்ந்தவனுமல்ல, கிரேக்க வம்சா வழி வந்தவன் என்று சபை சரித்திரம் சொல்கிறது. ரோமா புரியில் உயர் பதவியில் இருந்த தெயோப்பிலு போன்றவர்களோடு ஈடுபாடு கொண்டிருந்த லூக்கா ஒரு வைத்தியன்.

Friday, 22 July 2011

அந்திரேயா என்பது யார்?

மாற்கு எழுதின சுவிஷேசத்தில் உள்ள இயேசுவின் சீடர்கள் பட்டியலில் நான்காவது இடம் பெறும் பெயர் அந்திரேயா. அந்திரேயா என்ற கிரேக்க வார்த்தைக்கு மனிதத்தன்மை (Manly) என்ற பொருளுண்டு. கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தை சேர்ந்த அந்திரேயா, சீமோன் பேதுருவின் சகோதரன்.ஆனால், கப்பர் நகூமில் தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவோடு வாழ்ந்து வந்தான். பேதுருவைப் போல் மீன் பிடிக்கும் தொழிலை செய்தவன். யோவான் ஸ்நானன் "இதோ தேவா ஆட்டுக்குட்டி" என்று இயேசுவை அறிமுகம் செய்தபோது, யோவான் ஸ்நானனைப் பின் செல்வதை விட்டு இயேசுவைப் பின்பற்றலானான்.

Thursday, 21 July 2011

பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது

பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. -யோவான் 20:31 (புதிய ஏற்பாட்டில் பக்கம் 159)

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும் படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்கு போதனையாக எழுதியிருக்கிறது. -ரோமர் 15:4 (புதிய ஏற்பாட்டில் பக்கம் 223)

Wednesday, 20 July 2011

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமம் என்றால் என்ன?

இந்த உலகத்தில் உள்ள கணக்கிலடங்காத புத்தகங்களில், ஒரு புத்தகத்தை மட்டும் ஈடு இணையற்ற புத்தகம் என்று சொல்ல முடியும் என்றால் அந்தப் புத்தகம் பரிசுத்த வேதாகமம் ஆகும். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் புனிதமாய் போற்றும் வேதம் உண்டு. பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களின் வேதம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே படித்துப் பின்பற்ற வேண்டிய புனித நூல் பைபிள்.

பைபிள் என்ற வார்த்தை Bibilia (பிபிலியா) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாகும். இதன் பொருள் "புத்தகங்கள்" என்பதாகும். தலைசிறந்த புத்தகமாகிய பைபிள் 66 புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் இன்றைக்கு பேசப்படும் ஏறத்தாழ 5000 மொழிகளில் 2009 மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு புத்தகமாவது மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ஆதாரப்பூர்வமான ஒர் அறிக்கையின்படி 2 வாரங்களுக்கு ஒரு முறை மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய ஒரு குழு புதியதொரு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கிறார்கள். இயந்தரம் கொண்டு அச்சிடப்பட்ட முதல் புத்தகம் வேதாகமம்.


பரிசுத்த வேதாகமம் கடவுளைப் பற்றியும், மனிதனைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் பாவத்தின் பயங்கரமும் பரிசுத்தத்தின் மேன்மையும் விளக்கப் பட்டிருக்கிறது. பாவத்திலிருந்து மனிதனை மீட்க தேவன் வகுத்த திட்டத்தை பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது.

Monday, 18 July 2011

ததேயு

ததேயுவின் மறு பெயர்கள் என்ன?

மாற்குவின் சீடர் அட்டவணையில் பத்தாவதாக ததேயுவின் பெயர் வருகிறது. ததேயு புதிய ஏற்பாட்டில் மூன்று பெயர்களில் அழைக்கப்படுகின்றார். அவர் மாற்கு சுவிசேஷத்தில், ததேயு என்றும் (மாற்கு 3:18), லூக்கா சுவிசேஷத்திலும், அப்போஸ்தலர் நடபடிகளிலும் யாக்கோபின் சகோதரனாகிய யூதா என்றும் (லூக். 6:16; அப். 1:13), மத்தேயு சுவிசேஷத்தில் ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு என்றும் (மத். 10:3 ) அழைக்கப்படுகிறான். லெபேயு என்னும் வார்த்தை இருதயம் என்று அர்த்தபடும், லெப் (Leb) என்னும் வார்த்தையிலிருந்து வருகிறது.

Sunday, 17 July 2011

70

70 என்ற எண்ணின் சிறப்பு என்ன ?


இந்த எண் இஸ்ரவேலர் பாபிலோனில் செலவிடப்பட்ட சிறையிருப்பின் காலத்தைக் காட்டுகிறது. கி.மு.605இல் இருந்து கி.மு.536 வரை இஸ்ரவேலர் பாபிலோனில் கழித்தார்கள். தற்காலத்தின் ஈராக் நாடு இருக்கும் பகுதியில் தான் பாபிலோன் நாடு இருந்தது. இஸ்ரவேல் நாட்டிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் பாபிலோனிய நாடு இருந்தது. நாடு கடத்தப்பட்டு சிறையிருப்பின் கீழ் இஸ்ரவேலர் அனுப்பப்பட்டாலும், தேவனுடைய வார்த்தையின் படி அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினார்கள். இந்த சிறையிருப்புக் காலத்தில் தான் எசேக்கியேல், தானியேல் என்ற தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.

Saturday, 16 July 2011

குடிமதிப்பு

குடிமதிப்பு என்றால் என்ன?


தற்காலத்தில் குடிமதிப்பு (Census) எழுதுவது சர்வசாதாரணம். ரோம மன்னரான அகஸ்டஸ் சீசரால் தான் இக்காரியம் முதன்முதலாக முறையாக அமுல்படுத்தப்பட்டது. இதை வரிவிதிப்பதற்காகவே ஏற்படுத்தினான் அகஸ்டஸ். பதினான்கு ஆண்டிற்கு ஒருமுறை எழுதப்படும் இந்த குடிமதிப்பின்போது அவரவர் தங்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்பதுதான் கொஞ்சம் சிரமமான காரியம். இதனால் தான் யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் தங்குவதற்கு சிரமப்பட வேண்டியதாயிற்று. இயேசுவின் 14 வயது, 28 வயது ஆகியவற்றிலும் குடிமதிப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Friday, 15 July 2011

செங்கடலை கடந்தது எப்படி?

இஸ்ரேல் ஜனங்களை தேவன் செங்கடல் வழியாக வழி நடத்தினார். செங்கடலின் தண்ணீர் பிரிந்து இரண்டு பக்கமும் மதில் சுவராக நின்றது. கடலின் ஆழம் சுமார் நூறு அடி என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நூறு அடி தண்ணீர் வற்றியவுடன் இஸ்ரவேல் ஜனங்கள் நூறு அடி ஆழத்தில் இறங்கி பின் மேலே ஏறி வந்தார்களா? அப்படியானால் பிள்ளைகள் மிருக கீவங்கள் சகலவற்றையும் வைத்துக் கொண்டு அவ்வளவு பள்ளத்தில் இறங்கி பின் ஏறி வந்தது எப்படி?

யாத்திராகமம் 15:8 - உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்து போயிற்று.

நம் தேவன் எவ்வளவு ஆச்சரியமானவரும் நல்லவருமாய் இருக்கிறார் பாருங்கள் . கடலின் ஆழத்தில் உள்ள தண்ணீர் அப்படி பாறைக் கல்லைப் பூல உறைந்து போக செய்து விட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையில் நடப்பது போல் நடந்து சென்றார்கள்.

Thursday, 14 July 2011

மோசேயின் கற்பலகை

யாத்திராகமம் 31:18ம் வசனத்தில் சீனாய் மலையில் அவர் மோசேயோடே பேசி முடித்த பின் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை கொடுத்தார் என்று வாசிக்கிறோம். அந்த கற்பலகை இப்போது இருக்கிறதா?



தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகள் இப்போது இல்லை. ஏனென்றால் மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வரும் போது இஸ்ரேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக செய்து கொண்டிருந்த அக்கிரம செயல்களை பார்த்து கோபமூண்டவராகி தன் கையில் இருந்த பலகைகளை உடைத்துப் போட்டுவிட்டார். யாத்திராகமம் 32:19. பின்பு தேவனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு இரண்டு கற்பலகைகளை எடுத்துக் கொண்டு சீனாய் மலையின் மேல் ஏறி தேவன் தன்னிடம் சொன்ன கட்டளைகளை கற்பலகைகளில் எழுதினான்.

இந்த வார்த்தைகளை நீ எழுது. யாத்திராகமம் 34:27.

அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான். - யாத்திராகமம் 34:28.

இஸ்ரவேல் ஜனங்களின் அக்கிரம செய்கையால் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகையை நாம் இழந்து போனோம்.

Wednesday, 13 July 2011

விடுகதை 194

விடுகதை:
அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகருமாம் – ஆனால்
உலக்கையால் குத்தினாலும்
உரலிலே இருப்பானாம் -அவன் யார்?

விடை:
மூடன். நீதி 27:22.



Tuesday, 12 July 2011

விடுகதை 193

விடுகதை:
சுனாமி வந்தாலும் பயமில்லை
சுருட்டி எடுத்தாலும் பயமில்லை
எடுத்ததைக் கொடுத்தாலும்
கொடுத்ததை எடுத்தாலும்
சந்தோஷம் எனக்கு சந்தோஷமே -நான் யார்?

விடை:
ஆபகூக், ஆப 3:17,18.



Monday, 11 July 2011

விடுகதை 192

விடுகதை:
சிக்கன் வேண்டாம்
மட்டன் வேண்டாம்
சில்லி பீஃப் கொஞ்சமும் வேண்டாம்
பருப்பு, கீரை, காய்கறி போதும்
பலமாய் என்றும் வளருவோம் நாளும் -நாங்கள் யார்?

விடை:
தானியேல், அனனியா, மீஷாவேல் , அசரியா. தானி 1:1-20.



Sunday, 10 July 2011

விடுகதை 191

விடுகதை:
வயிற்றுப் பசி
கண்ணை மறைக்க
மண்ணை இழந்தான்
மதிகேடன் -அவன் யார்?

விடை:
ஏசா ஆதி 25:29-34.



Saturday, 9 July 2011

விடுகதை 190

விடுகதை:
எழம்ப முடியாத மனிதன்
முழங்கால் சண்டையில்
முழித்து எழுந்தான் -அது என்ன?

விடை:
விசுவாசமுள்ள ஜெபம், யாக் 5:14-16.



Friday, 8 July 2011

விடுகதை 189

விடுகதை:
கண் காணா தூரத்தில்
வெளிச்ச் அழகாய்
வீசுகின்றது – அது
மெதுவாய் இறங்கி வருகிறது. -அது என்ன?

விடை:
புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம், வெளி 21:10,11.



Thursday, 7 July 2011

விடுகதை 188

விடுகதை:
நீல நிறத் தண்ணீரில்
உறங்கி எழுந்தான்
புதிய மனிதன் -அது என்ன?

விடை:
ஞானஸ்நானம். கொலோ 2:12.



Wednesday, 6 July 2011

விடுகதை 187

விடுகதை:
சாத்தானின் வீட்டினிலே
சாத்தானுக்கு டாட்டா காட்டி
சாட்சியாய் வாழ்ந்து வந்த
உண்மையுள்ள உத்தமன் -அவன் யார்?

விடை:
அந்திப்பா. வெளி 2:13.



Tuesday, 5 July 2011

விடுகதை 186

விடுகதை:
பாவி எல்லாம் ஓடிவா பரிகாரம் கேட்க வா
தேங்காய் வேண்டாம் மாங்காய் வேண்டாம்
கோழி, கிடா எதுவும் வேண்டாம்
இரத்தம் சிந்தி மீட்ட அவர்
இன்றே உன்னை இரட்சிப்பார் -அவர் யார்?

விடை:
இயேசு கிறிஸ்து. அப் 16:31.



Monday, 4 July 2011

விடுகதை 185

விடுகதை:
ஏட்டிக்குப் போட்டி, ஏகப்பட்ட வாட்டி
காளையை மாட்டி, கண்டமட்டும் வெட்டி
ஆட்டமெல்லாம் ஆடி, பாட்டெல்லாம் பாடி
எலும்பையெல்லாம் காட்டி, சத்தமெல்லாம் கூட்டி
மாட்டி கொண்டனர் வெட்டிப்போட -அவர்கள் யார்?

விடை:
பாகால் தீர்க்கதரிசிகள். 1 இராஜா 18:22-40.



Sunday, 3 July 2011

விடுகதை 184

விடுகதை:
ஆண்டவரின் ஆலயத்தை
அழ்குப்படுத்தி பார்ப்பான்
அடியேன் கேட்பதாய்
அமைதியாய் சொல்லுவான்
அனைவருக்கும் மாதிரியான
அன்பான நண்பன் அவன் -அவன் யார்?

விடை:
சாமுவேல். 1 சாமு 3-10.



Saturday, 2 July 2011

விடுகதை 183

விடுகதை:
 இன்றே..
      இப்போதே..
      இந்த
      இல்லத்துக்கு
      இறைமகன்
      இயேசுவால்,
      இரட்சிப்பு வந்தது..
      இழந்ததை மீட்டது...
              - யாருடைய வீடு?
  விடை:
சகேயுவின் வீடு (யோவான் 19:9,10)


Friday, 1 July 2011

விடுகதை 182

விடுகதை:
அன்பானவர்
    அழகாய் தந்த
      அருமையான
        அச்சாரம்...
                        - அது என்ன?

விடை:
ஆவியென்னும் அச்சாரம் (2கொ 5:5)