Search This Blog

Sunday 2 September 2018

மத்தேயு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்று சொல்லப்பட்டது யாருக்கு?
குஷ்டரோகி. மத்தேயு 8:4
2. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று எந்த தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது?
ஏசாயா. மத்தேயு 8:17
3. பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்த வேளை எது?
அஸ்தமனமானபோது. மத்தேயு 8:16
4. பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் எந்த நாட்டில் வந்த போது எதிராக வந்தார்கள்?
கெர்கெசேனர்.  மத்தேயு 8:28
5.  எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
குஷ்டரோகி. மத்தேயு 8:3
6. நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்?
நூற்றுக்கு அதிபதியை. மத்தேயு 8:13.

No comments:

Post a Comment