Search This Blog

Friday 6 January 2012

யோசுவா

யோசுவாவின் புத்தகம் முதல் பழைய ஏற்பாட்டில் வரலாற்றுப் புத்தகங்கள் எனும் இரண்டாம் பிரிவு துவங்குகிறது. யோசுவா முதல் எஸ்தர் வரை 12 புத்தகங்கள் இப்பிரிவில் அடங்குகிறது.

இப்பிரிவில் முதல் 9 புத்தகங்கள் (யோசுவா முதல் 2 நாளாகமம் வரை) சிறையிருப்பின் காலத்திற்கு முன் எழுதப்பட்டவை எனவும் மீதி உள்ள 3 புத்தகங்கள் (எஸ்ரா முதல் எஸ்தர் வரை) சிறையிருப்பின் காலத்திற்குப் பின் எழுதப்பட்டவை எனவும் கருதப்படுகிறது. இப்பிரிவில் நியாயாதிபதிகள், ராஜாக்கள் இடம் பெறுகின்றனர். இஸ்ரவேலரின் சுமார் 1000 வருட வரலாற்றை இப்பகுதி விளக்குகிறது.

வரலாற்று புத்தகங்களின் முதலாவது இடம் பெற்றுள்ள யோசுவா "வெற்றிகளின் புத்தகம்" என அழைக்கப்படுகிறது.

யோசுவா எனும் பெயருக்கு "யெகோவாவே இரட்சிப்பு" என்று பொருள் படும். யோசுவா என்ற வார்த்தை கிரேக்கத்தில் இயேசு என்ற பெயருக்கு இணையான சொல் எனலாம்.

ஆசிரியர் : யோசுவா என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் 24:29-33 பகுதியை பிரதான ஆசாரியன் எலியேசர் அல்லது அவரது மகன் பினகாஸ் எழுதியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

எழுதப்பட்ட காலம் : கி.மு.1390 க்கு பின் (கானானின் வெற்றிக்குப் பின்) எழுதப்பட்டிருக்கலாம்.

மொத்த அதிகாரங்கள் :24

மொத்த வசனங்கள் : 658

திறவுகோல் வசனம் :1:11

எழுதப்பட்ட நோக்கம் : கர்த்தரின் வாக்கை விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டு முழுமையாய் கீழ்ப்படிந்து செயல்படும் போது வெற்றி நிச்சயம் என்ற உண்மையை கற்றுக் கொடுக்க இந்த வரலாற்று புத்தகம் உதவி செய்கிறது.

பகுப்பு : 1:1 - 5:12 கானானுக்குள் நுழைதல்
5:13 - 12:24 கானானை வெற்றிகொள்ளுதல்
13:1 - 24:33 கானானை பகிர்ந்தளித்தல்

சிறப்புக் குறிப்புகள் : யோசுவா என்ற நபரிடம் நாம் காணும் விசுவாசம், தைரியம், இறை திட்டத்தினை நிறைவேற்றும் உறுதியான கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகள் இன்றைக்கு நமக்கு அறைகூவல்களாக உள்ளன.

கீழ்படியும் போது வெற்றியும் (எரிகோ கோட்டை தகர்க்கப்படுதல்), கீழ்ப்படியாமையால் தோல்வியும் (ஆயி பட்டண தோல்வி) உண்டு என்பதை நாம் அறிய முடியும்.

கானான் நாட்டிற்க்கு வேவு பார்க்க சென்ற யோசுவாவின் சரியான் புரிந்து கொள்ளுதலும், தைரியமான விசுவாச அறிக்கையும் மோசேக்கு அடுத்த தலைவராக நியமிக்கப்பட முக்கிய காரணங்களாகும்.

கர்த்தர் தம் வார்த்தையை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராகவே உள்ளார்என்பதை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அற்புதங்கள் யோர்தான் நதியைக் கடந்தது. எரிகோ பட்டணத்தின் சுவர் இடிந்து விழுந்தது, கல்மழை பெய்தது, சூரியனும் சந்திரனும் தரித்து நின்றது.

யோசுவா இப்புத்தகத்தில் 31 ராஜாக்களை வெற்றி கொள்ளுதல்.

"சுதந்தரித்துக் கொள்ளுதல்" என்ற வார்த்தையும், இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் சுமார் 56 தடவைக்கு மேல் இடம் பெற்றுள்ளது.

பங்கு வீதம் என்ற சொல் சுமார் 22 தடவைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்புத்தகம் முழுமையும் ஒரே சீராக வாசித்து முடிக்க சுமார் 2 மணி நேரம் தேவை.

இப்புத்தகம் கூறுவது என்ன ?

1. யோசுவாவைப் போல, நமக்கும் விசுவாசத்துடன் கூடிய புரிந்து கொள்ளுதல் தேவை. இத்தகைய புரிந்து கொள்தலே கானானை பற்றிய தைரியமான அறிக்கையை யோசுவா மோசேக்கு அளித்தார். எந்த சூழலையும், எந்த நபரையும் இயேசு கிறிஸ்துவுடன் உள்ள விசுவாசத்துடன் கூடிய புரிந்து கொள்ளுதலுடன் அனுகுவோமானால், நாமும் சிறந்த வெற்றி வாழ்க்கையை வெளிப்படுத்தலாம்.

2. கீழ்ப்படிதல் இக்காலக் கட்டத்தில் இன்றைய தலைமுறைக்கு தரப்படும் சவால். நம் கரங்களில் தரப்பட்டுள்ள எழுதப்பட்ட இறை வாக்காகிய வேதத்திற்கு கீழ்ப்படியும் போது எந்த சூழ்நிலையும் பரிசாகவே அமையும்.
3. வேதத்திற்கு கீழ்ப்படியும் எவரையும், தம் திட்டத்தை நிறைவேற்ற கர்த்தர் பயன்படுத்துகிறார் என்பதை யோசுவாவின் வாழ்வு எடுத்துக் கூறுகிறது. கர்த்தரின் கரத்தால் பயன்படும் கருவியாய் வாழ நாம் ஆயத்தமா?

No comments:

Post a Comment