1. சிம்சோனால் 3முறை ஏமாற்றப்பட்டவள் எங்கு குடியிருந்தாள்?
சோரேக் ஆற்றங்கரையில் (16:4,15)
2. இறக்கும் போது, தன்னோடு பல உயிர்களை⚰ பலி வாங்கியது யார்?
சிம்சோன் (16:30)
3.பணத்திற்காக, தன்னோடு அன்பாயிருந்தவனுக்கு துரோகம் பண்ணியது யார்?
தெலீலாள் (16:4-19)
4.சிம்சோன் கதவுகளை சுமந்து கொண்டு போன இடம் எது?
எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்கு (16:3)
5. பெலிஸ்தியரின் தெய்வம் யார்?
தாகோன் (16:23)
6. சிம்சோனை தெலீலாள் பெலிஸ்தரிடம் பலமுறை காட்டிகொடுத்த போது கூட தன் புத்தியீனத்தை அனைத்தையும் மாற்றிக் கொள்ளாமல் இருந்தான் ஏன்?
6. சிம்சோனை தெலீலாள் பெலிஸ்தரிடம் பலமுறை காட்டிகொடுத்த போது கூட தன் புத்தியீனத்தை அனைத்தையும் மாற்றிக் கொள்ளாமல் இருந்தான் ஏன்?
அனுதினமும் ஆசைக்காட்டி அன்போடு பேசி மயக்கினால் 16:16
7. சிம்சோனை தெலீலாள் எத்தனை விதமான கயிறால் கட்டினாள்?
(மூன்றுவிதமான கயிறுகளினால்)
- உலராத பச்கையான கயிறு 16:7
- புதுக் கயிறு 16:11
- நெசவு நூல் (கயிறு) 16:13,14
8. ஒரு கிறிஸ்தவன் (சிம்சோன்) அந்நிய பெண்ணிடன் தொடர்பு வைத்துக் கொண்டப்படியால் அவன் முடிவு எப்படி இருந்தது?
- கர்த்தர் அவனுடன் இருந்து விலகினார் 16:20
- புறஜாதிகளுக்குள்ளே பரியாசம் பண்ணப்பட்டான் 16:27
- தப்பி ஓடாதப்படி இரு கண்களும் பிடுங்கப்பட்டது 16:21
- அவன் மரணம் அவர்களுக்கு இன்பமாய் இருந்தது 16:23
- இரு கை காலூம் தூணில் கட்டப்பட்டது 16:26
No comments:
Post a Comment