Search This Blog

Sunday 18 September 2016

I சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேல் ராஜாவின் சேனாபதி யார்?
      அப்னேர் (17:55)
2. தன் தம்பியிடம் கோபமாய் பேசிய அண்ணன் யார்?
       எலியாப் (17:28)
3. கோலியாத்தின் கவச நிறை எவ்வளவு?
      ஐயாயிரம் சேக்கலான வெண்கலம் (17:5)
4. ஈசாய் அதிபதிக்கு கொடுக்க சொன்னது என்ன?
      பத்துப் பால்கட்டிகள் (17:18)
5. 🦁🐻 - இவைகளை கொன்றது யார்?
      தாவீது (17:34-36)
6. ஒற்றைக் கல்லினால், மடிந்த வீரன் எவ்வூரான்?
      காத் (17:4,49)
7. ஈசாயின் எட்டாவது குமாரன் யார்?
      தாவீது (16:10,11,17:12-14)
8. இஸ்ரவேலர் எல்லாரும் ஏலா பள்ளத்தாக்கிலே யாரோடு யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்?
பெலிஸ்தரோடு   1சாமுவேல் - 17:19
9. "சுகமாயிருக்கிறீர்களா"  - என்று  யார், யாரிடம் கேட்டது?
தாவீது தன் சகோதரரைப் பார்த்து.   1சாமுவேல் - 17:22
10. பெலிஸ்தர் எதின் வழியில் எந்தெந்த பட்டணங்கள் மட்டும் வெட்டுண்டு விழுந்தார்கள்?
சாராயீமின் வழியிலும், காத், எக்ரோன் பட்டணங்கள் மட்டும்.
   1சாமுவேல் 17:52

No comments:

Post a Comment