Search This Blog

Wednesday, 12 October 2011

விடுகதை 233

இரைச்சல்..
       இரைச்சல்..
       இரைச்சல்..பெருவெள்ள
       இரைச்சல்
                        - அது என்ன?
               மனுஷகுமாரனுக்கொப்பானவருடைய சத்தம் (வெளி 1:15)

Tuesday, 11 October 2011

விடுகதை 232

செய் !
        செய் !
        செயலை நன்றாய் !
        செய்...நன்மையாய்
        செய்பவன் இவரால் உண்டானவன்...
                         - அவர் யார்?
              தேவன் (3 யோ 11)   

Monday, 10 October 2011

விடுகதை 231

அதை விட்டாய்..
     அதை விட்டதே உன் குறை...
     அதை மீண்டும் தொடர்ந்து செய்...
     அதினால் நீங்கிடா விளக்குத்தண்டு....
                         -எதை?
           ஆதியில் கொண்ட அன்பை ( வெளி 2:4,5)

Sunday, 9 October 2011

விடுகதை 230

கையில் பணம் ஆதலால் என் வாழ்வில் நாசம்..
 எனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
சீமோன். அப்போஸ்தலர் 8:9-21

Saturday, 8 October 2011

விடுகதை 229

என்னுடைய கையினாலே
தேவன் இரட்சிப்பைத் தருவார்
என்பதைத் தன் சகோதரர் அறிவார்கள்
என்று நினைத்தது யார்?
 மோசே. அப்போஸ்தலர் 7:20-25

Friday, 7 October 2011

விடுகதை 228

கோத்திரப்பிதாக்கள்
பொறாமைகொண்டார்கள்.
விற்றுப்போட்டார்கள்.
தேவனோ விடுவித்தார்,
அதிகாரியாக நின்றேன்.
நான் யார்?
யோசேப்பு. அப்போஸ்தலர் 7:9-10

Thursday, 6 October 2011

நான்கு விதமான பிறப்பு

வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது.

1) மண்ணிலிருந்து ஆதாம்.
2) எலும்பிலிருந்து ஏவாள்.
3) தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.
4) கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.

Wednesday, 5 October 2011

தள்ளப்பட்ட வேதம்

தள்ளப்பட்ட வேதம் (Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.

Tuesday, 4 October 2011

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள்

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.

Monday, 3 October 2011

ஐபிராத்து நதி

ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.

Sunday, 2 October 2011

அரராத் மலை

வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.

Saturday, 1 October 2011

விடுகதை 227

பாவம்
    பாவம் இதை மீறுகிறதே
    பாவம்....
                     -எதை?
            நியாயப்பிரமாணத்தை (1 யோ 3:4)

Friday, 30 September 2011

விடுகதை 226

பரிந்து பேசும்
    பரிகாரி;நமக்காய்
    பலியானவர்...
                       - யார்?
                இயேசுகிறிஸ்து (1 யோ 2:1,2)

Thursday, 29 September 2011

சிலுவையில் அறையப்பட்டவர்கள்

வேத பண்டிதர்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்..

1. திஸ்மாஸ்
2. கெஸ்டாஸ் என்று கண்டு பிடித்துள்ளனர்.

Wednesday, 28 September 2011

மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்

இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டு வந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்.

1. மெல்கொயர் – பரிசு பொன்.
2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

Tuesday, 27 September 2011

பரிசுத்த வேதம்

a) கையில் இருக்கவேண்டும் – 2 நாளா 17:9, ஏசா 34:16, யோவா 5:39, அப் 17:11,12, உபா 17:19,20.
 
b) வாயில் இருக்கவேண்டும் – மல் 2:7,6, 2 சாமு 23:2.
 
c) இருதயத்தில் இருக்க வேண்டும் – சங் 37:31, எஸ்றா 7:10, எரே 15:16, 31:33, சங் 119:165, 19:10, நெகே 8:8, லூக் 8:14.

Monday, 26 September 2011

அதிசயமான மூன்று

அதிசயமான மூன்று!
 
a) கர்த்தருடைய வேதம் அதிசயம் – சங் 119:18.
b) கர்த்தருடைய நாமம் அதிசயம் – நியா 13:8, ஏசா 9:6.
c) கர்த்தருடைய கிரியைகள் அதிசயம் – சங் 139:14, வெளி 15:3.

Sunday, 25 September 2011

நல்லது

தேவன்
 
a) வெளிச்சத்தை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:4.
b) பூமி, சமுத்திரத்தை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:10.
c) புல், பூண்டு, விருட்சங்களை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:12.
d) சுடர்கள், நட்சத்திரங்களை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:18.
e) ஜீவ ஜந்துக்கள், பறவைகளை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:21.
f) காட்டு, நாட்டு மிருகங்களை, ஊரும் பிரானிகளை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:25.
g) மனிதன் சிருஷ்டித்து அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கண்டார் – ஆதி 2:18.

Saturday, 24 September 2011

இதெக்கேல் நதி

ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.

Friday, 23 September 2011

விடுகதை 225

நடந்தனர்
      நடந்தனர்
      நல்ல
      நம் பிள்ளைகள்
      நடந்தனர்..
      நடந்த
      நற்செய்தியை
      நன்றாய் அறிந்ததும்
      நல்ல மகிழ்ச்சியே....
                     - எதிலே?
           சத்தியத்திலே (3 யோ 4)

Thursday, 22 September 2011

விடுகதை 224

இருக்கிறார்
    இருக்கிறார்...ஒளியிலே
    இருக்கிறார்..
    இயேசுவோடு ஐக்கியமாய்
    இருக்கிறார்..
    இருப்பவர்
    இவரிலே
    இருளுக்கு
    இடமில்லை...
                    -அவர் யார்?
               தேவன் (1 யோ 1:5)

Wednesday, 21 September 2011

விடுகதை 223

அல்லல் படும்படி
     அல்ல....
     அக் கண்ணில்
     அதிகக் கண்ணீர்
     அலைபோலே பெருகிட
      அடியேனின்
      அக்குணத்தை
      அறிந்திட
      அழகாக
      அனைவர்க்கும் எழுதினேன்.......
                  "அக்குணம்" எது?
விடை:
மிகுதியான அன்பு (2கொ 2:4)

Tuesday, 20 September 2011

இயேசு

வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.
 
1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.

Monday, 19 September 2011

முகம் பிரகாசித்த 3 பேர்கள்

தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்
 
1. மோசே – யாத் 35:28-30
2. இயேசு – மத் 17:2
3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56

Sunday, 18 September 2011

யோர்தான் நதி

யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19
2. 2 இரா 2:8
3. 2 இரா 2:13,14.

யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.

Saturday, 17 September 2011

ஜீவ விருட்சம்

“ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.

Friday, 16 September 2011

ஜெபம்

ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
 
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.

Thursday, 15 September 2011

எலியா


‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
 
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.

Wednesday, 14 September 2011

பாட்டு பாடின பெண்கள்

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
 
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.

Tuesday, 13 September 2011

விடுகதை 222

      இருந்தவர்
      இருக்கிறவர்
      இனி வருகிறவர்
      இவர்
      இருக்கை சிங்காசனம்...
      இறந்தோரிலிருந்து முதற்பிறந்தவர்..
      இவ்வுலகின் அதிபதி..
                     - அவர் யார்?
              இயேசுகிறிஸ்து ( வெளி 1:4,5)

தந்தி முறை


தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
 
What hath God wrought ? – Num 23:23.
தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.

Monday, 12 September 2011

கிறிஸ்துக்கள்

3 விதமான கிறிஸ்துக்கள்
 
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.

Sunday, 11 September 2011

கிதியோன்

கிதியோன் மீதியானியரை ஜெபிக்க சதாரணமான பொருள்களை பயன்படுத்தினார் – நியா 7:16-22.
 
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி

Saturday, 10 September 2011

தாவீது

தாவீது 3 முறை ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார்
 
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.

Friday, 9 September 2011

விடுகதை 221

விடுகதை:
      சாதிப்போம்...
      சாதிப்போம்...
      சாவாமையுள்ளவர்
      சாதனையாகவே
      சாவினின்றுயிரோடே
      சாட்சியாய் எழுந்ததை இல்லையென
       சாதிப்போம்..
            -நாங்கள் யார்?     

விடை:
சதுசேயர் (யோவான் 20:27)

Thursday, 8 September 2011

சேலா

“சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

Wednesday, 7 September 2011

அப்பா பிதாவே

“அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.

Tuesday, 6 September 2011

விடுகதை 220

அன்பினில் கறைகளாய்..
அடியுண்டோடும் மேகங்களாய்...
அசைவில்லா மரங்களும்...
அமளியான கடலலைகளும்...
அறநெறி தப்பி
அலைந்திடும் நட்சத்திரங்களாயிருக்கும்
அவர்களுக்காக வைக்கப்பட்டது......
                      - அது என்ன?
                 காரிருள் (யூதா 13)

Monday, 5 September 2011

நைல் நதி

மோசே குழந்தையாக எஇடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.

Sunday, 4 September 2011

வேதாகம பயணம்

நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் ,   எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த நேரத்தில் யோசுவா , நியாயாதிபதிகளின்  அழகிய கதவில் நின்றபடி ரூத் என்பவள்"சாமுவேல் , சாமுவேல் " என்று சத்தமாக அழைத்துக் கொண்டிருந்த போது அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். 
      

ஒரு கட்டத்தில், முதலாம் ராஜாக்களும் , இரண்டாம் ராஜாக்களுமாய் இருந்த , நாளாகமங்களின் ராஜாக்கள், எஸ்றாவையும் , நெகேமியாவையும் , எஸ்தரையும், அவர்களது சகோதரன் யோபு அடைந்திருந்த துரதிருஷ்டமான நிலைமையின் நிமித்தமாக சந்திக்க வந்து கொண்டிருந்தனர். 
          

அவர்கள் சங்கீதம் பாடத்தொடங்கியபடிக் குழந்தைகளுக்கு நீதிமொழிகளைப் பிரசங்கித்து சாலமோனின் உன்னதப்பாட்டைக் கற்பித்தனர்.
        

இதே கால கட்டத்தில் சக நிகழ்வாக,  ஏசாயா, எரேமியாவின் புலம்பலை, 
எசேக்கியேல், தானியேல், ஓசியா , யோவேல் என்ற நண்பர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஆமோஸும் , ஒபதியாவும் அருகில் இல்லை. 


        மூன்று நாட்களுக்குப் பிறகு யோனா , மீகாவும், நாகூமும் எருசலேமுக்குப் பயணம் செய்த கப்பலிலேயே பயணித்தார். ஆபகூக் , அதன் பிறகு செப்பனியாவை சந்திக்க, அவர் ஆகாய் எனப்பட்ட சகரியாவின் நண்பரும் , மல்கியாவின் ஒன்று விட்ட சகோதரரும் ஆனவரை அறிமுகப் படுத்தினார். 


            உடனடியாக சம்பிரதாயப்படி, மத்தேயு , மாற்கு , லூக்கா, யோவான் என்பவர்கள், அப்போஸ்தலருடைய நடபடிகளின்படி , ரோமர், Iகொரிந்தியர் போல நடந்து கொள்ளுவதில் கவனம் செலுத்தினர். ஏனென்றால் IIகொரிந்தியர் கூட்டத்தினர் எப்பொழுதும் கலாத்தியரிடம் சண்டையிடுபவர்களாக இருந்தனர். 


           அந்த நேரத்தில் அவர்கள் உணர்ந்து கொண்டதாவது, எபேசியரும் , பிலிப்பியரும் கொலோசேயருக்கு நெருக்கமானவர்கள் என்பதும் , முதலாம் தெசொலேனிக்கேயர் சந்திப்புக்குப் பிறகு இரண்டாம் தெசொலேனிக்கேயர் சந்திப்பு வருவதற்குள் அவர்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு சகோதரர்களை சந்திக்கும்படி அறிவுறுத்தப் பட்டார்கள். அவர்களோ தீத்துவின் வீட்டிற்கு , அவர்களின் தம்பி பிலமோனுக்கு எபிரேயர் மொழியை எழுதவும் , படிக்கவும் கற்பிக்கப் போயிருந்தனர். 


           இதனைக் கேள்விப்பட்ட யாக்கோபு , இரண்டுமுறை பேதுருவிடம் விளக்கும்படி கேட்டுக் கொண்ட காரியம் , மூன்று யோவான்களும் யூதாவிடம் தங்கள் பயணத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தைப் பகிர்ந்து கொண்டார் என்பதுவே.


Saturday, 3 September 2011

விடுகதை 219

அணிவோம்
       அணிவோம்
       அனைவரும்
       அணிவோம்...
       அழிந்திடும் சாயல்
       அறவே
       அகற்றி
       அக்களிப்போடு
       அதனையும்_
       அணிவோம்.... 
                     - எதனை?
           வானவருடைய சாயலை (1கொ 15:49)

Friday, 2 September 2011

விடுகதை 218

பெருகுது...
     பெருகுது...
     பெரும் பாடுகள்
     பெருகுது..
     பெரியவர் (இயேசு) கிறிஸ்துவால்,
     பெருகுது மற்றொன்றும்....
                 - அது  என்ன?
          ஆறுதல் (2கொ 1:5)

Thursday, 1 September 2011

விடுகதை 217

    சத்தியம் பேசுபவனின்
    சரீரம் குறித்து
     சர்ப்பத்திடம்(பிசாசு)
     சம்பாஷித்தார் தர்க்கமாய்..
                      - அவர் யார்?
            பிரதான தூதன் மிகாவேல் (யூதா 9)

Wednesday, 31 August 2011

விடுகதை 216

வெளிப்பட்டார்,
 விளங்கப்பட்டார்,
 காணப்பட்டார்,
 பிரசங்கிக்கப்பட்டார்,
  விசுவாசிக்கப்பட்டார்,
  ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
 அவர் யார்?
தேவன். 1 தீமோத்தேயு 3:16

Tuesday, 30 August 2011

விடுகதை 215

அநேக காரியம் உண்டு...
    அதினாலும்,
    அதினாலும்,
    அவர்களுக்கு
    அன்பாய் எழுத மனமில்லையே.....
    அவர்களின் மகிழ்வுக்காக.....
                - எதினெதினால்?

                   காகிதத்தினாலும், மையினாலும் (2 யோ 12)

INRI

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்கட்டிருக்கும் படங்களில் INRI என்று எழுதப்பட்டிருப்பதற்கான அர்த்தம் இதுதான் Iesus Nazarenus Rex Iudaeorum. இது வேதத்தில் யோவான் 19:19-20 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது, இறைமகன் இயேசுவைக் குறித்து ரோம ஆளுநர் பிலாத்து எழுதி வைத்த வராற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகள்தான் இவைகள் 'நசரேயனாகிய இயேசு யூதர்களின் அரசர் ' இதுவே அதன் பொருள். இது எபிரேயம் , இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த தாக சத்திய வேதம் சான்று பகர்கின்றது...

Monday, 29 August 2011

விடுகதை 214

பிதாவும்
       பிதாவின்
       பிரியமான மகனும் என்னுள்
       பிணைந்துள்ளனர்..
                       - நான் யார்?
            கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் (2 யோ 9)

Sunday, 28 August 2011

விடுகதை 213

மெய்யான தேவன்
          நித்திய   ஜீவன்
     தேவனின்    மகன்
                         - யார்?
               தேவனுடைய குமாரன் இயேசுகிறிஸ்து ( 1யோ 5:20)

Saturday, 27 August 2011

விடுகதை 212

சாட்சிகள்
    சாட்சிகள் பரலோகில்
    சாட்சிகள்...
    சாட்சிகள் மூவரும்
    சாதாரணமானோரல்லவே...
    சாட்சிகள் ஒருமைப்பாட்டில்
    சாதனை செய்தனர்....
                     - அவர்கள் யார்?
              பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி (1 யோ 5:7)           

Friday, 26 August 2011

விடுகதை 211

தந்தை(பிதா)
     தனக்காயல்ல...
     தம் அன்புமகனை,
     தன் படைப்பாம் உலகுக்கு,
     தம் மக்களின்
     தன்னிகரில்லா மீட்புக்காய் அனுப்பினார்....
                   - எவ்வாறு?
               உலகரட்சகராக (1 யோ 4:14)

Thursday, 25 August 2011

விடுகதை 210

அன்பானவர்
    அன்பாகவே இருக்கிறார்...
    அன்பான
    அவரை
    அவன்
    அறியான்...
                    -அவன் யார்?
               அன்பில்லாதவன் (1 யோ 4:8)

Wednesday, 24 August 2011

விடுகதை 209

விடுகதை:

ஆதாயம் என்னும் போர்வைக்குள்
அமர்ந்து இருப்பாள் லாபம்   -அது எந்த போர்வை?
  விடை:
போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தி. 1 தீமோ 6:6.

விடுகதை 208

விடுகதை:
மூடன் என்று சொன்னான்
முக்கியமானதைக் கேட்டான்
படியைப் போட்டு மடியை நிரப்பி
காத்துக்கொள்ள வேண்டிக் கொண்டான் -அவன் யார்?

விடை:
ஆகூர். நீதி 30:1-9.

Tuesday, 23 August 2011

விடுகதை 207

விடுகதை:

வியாபாரக் கப்பல் அவள்
விலையுயர்ந்த முத்து அவள்
வீட்டுக்கு வெளிச்சம் அவள்
வீதிக்கு வள்ளல் அவள்
கண்டிபிடிப்பதில் கடினம் அவள்
கண்டுபிடித்தால் இன்பம் அவள்  -அவள் யார்?
  விடை:
குணசாலியான ஸ்தீர். நீதி 31:1-31.

Monday, 22 August 2011

விடுகதை 206

விடுகதை:
கடவுளுக்கு வந்தது வருத்தமாம்
கண்களில் இருந்தது கிருபையாம்
வருத்தம் அழிவைத் தந்ததாம்
கிருபை அவனைக் காத்ததாம்  -அவன் யார்?
  விடை:
நோவா. ஆதி 6,7 அதி.

Sunday, 21 August 2011

விடுகதை 205

விடுகதை:
 நினைக்கும் பருவம் இதுவாம்
நடக்கும் பருவம் இதுவாம்
வாழ்க்கை வாழ்வதற்கே எண்ணம்
எட்டிப் பார்க்கும் பருவம்
கணக்கு கொடுக்க வேண்டியதை
கணித்துச் சொல்லும் பருவம்   -அது என்ன?
  விடை:
வாலிபப் பருவம். பிர 11:9.

Saturday, 20 August 2011

விடுகதை 204

விடுகதை:
ஓடும் நீரின் ஓரத்தில்
ஓங்கி உயர்ந்த நாணலில்
ஒளிந்து கிடந்தது பெட்டி
உள்ளே இருந்தான் சுட்டி   -அவன் யார்?
  விடை:
மோசே. யாத் 2:1-10.

Friday, 19 August 2011

விடுகதை 203

விடுகதை:
சொப்பனத்தில் செளிந்தவன்
சொன்னபடி செய்தவன்
சொர்க்கத்து முத்ததனை
செல்லமாய் வளர்த்தவன்   -அவன் யார்?
  விடை:
யோசேப்பு. மத் 1:18-25.

Thursday, 18 August 2011

விடுகதை 202

விடுகதை:
மறுபடியும் மறுபடியும் சொன்னாலும்
மனதுக்குள் இது வருவதில்லை.
மற்றக் கவலைகள் மலையாய் சேர
மறுபடியும் அது தேவைதானே  -அது என்ன?
  விடை:
சந்தோஷம். பிலி 4:4.

Wednesday, 17 August 2011

விடுகதை 201

விடுகதை:
 ஆறடி தேக்கு மரம்
அரசம் பழம் பட்டு
தொப்பென்று விழுந்தது  -அது யார்?
  விடை:
கோலியாத். 1 சாமு 17:4,49.

Tuesday, 16 August 2011

விடுகதை 200

விடுகதை:
இரண்டெழுத்து பெண்
மூன்றெழுத்து ஆணை மணந்து
ஓபேதை பெற்றாள் - அவள் யார்?
  விடை:
ரூத். மத் 1:5.


Monday, 15 August 2011

விடுகதை 199

அவர் கட்டளைகளை
    அன்பாய் கைக்கொண்டால்
    அவரில் நிலைப்போம்...
    அவரில் நிலைத்ததை
    அதினாலே
    அறிவோம்....
                       - எதினாலே?
            அவர்{இயேசுகிறிஸ்து}தந்தருளின ஆவியினாலே (1 யோ 3:24)


Sunday, 14 August 2011

விடுகதை 198

அபிஷேகம் பெற்று
   அனைத்தையும்
   அறிந்தோம்
   அவராலே !
                     - யாராலே?
                 பரிசுத்தராலே (1 யோ 2:20)


Saturday, 13 August 2011

விடுகதை 197

விடுகதை:
புறப்பட்டது இடி..
     புறப்பட்டது மின்னல்..
     புறப்பட்டது சத்தம்..
                 - எதிலிருந்து?
விடை:
              சிங்காசனத்திலிருந்து (வெளி 4:5)


Friday, 12 August 2011

விடுகதை 196

உண்மை
     உண்மை
     உயிருள்ளவரை
     உண்மை
     உண்மையாயிருப்பின்
     உன்னதரேசு
     உனக்குத் தரும்
     உயரிய பரிசு....
                     - அது என்ன?

விடை:
                  ஜீவகிரீடம் ( வெளி 2:10)


Thursday, 11 August 2011

விடுகதை 195

அழகிய உடைகளை
      அசுசிப் படுத்தாமல்
      அவர்களில் சிலர்...
      அவர்கள் பாத்திரவான்களெனில்
      அவர்களுக்கு
      அழகிய வெள்ளை உடை.....
                  - எந்த சபை?
             சர்தை சபை (வெளி 3:4,5)



Wednesday, 10 August 2011

மெத்தூசலா

மெத்தூசலா மரித்த வருடமும் நோவா கால ஜலபிரளயம் உண்டான வருடமும்
ஒன்றுதான். மெத்தூசாலா 187 வயதில் லாமேக்கை பெற்றான் – ஆதி 5:25.
லாமேக்கு 182 வயதில் நோவாவை பெற்றான் – ஆதி 5:28,29.
நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் ஜலபிரளயம் உண்டானது – ஆதி 7:11
187+182+600 = 969. 
மெத்தூசலாவின் ஆயுட்காலம் 969 வருஷம்.

Tuesday, 9 August 2011

எஸ்தர்

எஸ்தர் என்பது பெர்சிய பெயர். இது ஸ்டார் (Star) என்று பெர்சியச் சொல்லிருந்து தோன்றியது ஆகும். "கிழக்கு வெள்ளி" என்பது இதன் பொருள். இலத்தீன் பெயர் ஹெஸ்டர். பாபிலோன் தேவதை இஷ்டார் என்ற பெயரோடு ஒரு தொடர்பு இருக்கலாம் என்று அறிஞர்களில் சிலர் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். இந்த நூலின் கிரேக்க தலைப்பு எஸ்தர் என்பதாகும். எஸ்தரின் யூதப் பெயர் அத்சாள் (Hadassah -Myrtle). நறுமண மலர்ச்செடி என்பது இதன் பொருள்.

Monday, 8 August 2011

காய்பா

எழுபது பேர் கொண்ட யூத பேரவைக்கு சனகரீம் சபை என்று பெயர். யூதர்களில் நடவடிக்கைகளை விசாரித்துத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் இச்சபைக்கு இருந்தது. இதன் தலைவராக அன்னா என்பவர் இருந்தார். பிறகு ரோமர்கள் இவரை நீக்கிவிட்டுக் காய்பாவை பதவியமர்த்தினர். இந்த காய்பா அன்னாவின் மருமகன்.

Saturday, 6 August 2011

தெசலோனிக்கே ஒரு அறிமுகம்

தெசலோனிக்கே என்பது மக்கெதோனியா நாட்டின் மிகப் பெரிய கடற்கரைப் பட்டிணம். கி.பி.49 க்கும் 54க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பவுல் தனது முதலாம் நிருபத்தை தெசலோனிக்கேயருக்கு எழுதுகிறார். இந்நிருபம் கொரிந்து பட்டிணத்திலிருந்து எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. பவுலின் இரண்டாம் மிஷனரி பயணத்தின் போது இப்பட்டணத்தில் சபை நிறுவப்பட்டது. ஆனால் பயங்கரமான எதிர்ப்பின் காரணத்தால் (அப் 17:1-10) பவுலும், சீலாவும் இப்பட்டிணத்தை விட்டு வேகமாக வெளியேற நேர்ந்தது. பின்பு இச்சபையாரின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அறிய பவுல் தீமோத்தேயுவை அனுப்புகிறார்.

முதலாம் நிருபம் எழுதிய பிறகு மிகக் குறுகிய கால இடைவெளியில் இரண்டாம் நிருபத்தை எழுதினார். தெசலோனிக்கேயர் இன்னும் உபத்திரவங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், கர்த்தரின் நாளைப் பற்றிய உபதேசங்கள் தவறாய்ப் போதிக்கப்பட்டிருந்தாலும் பவுல் இவ்விரண்டாம் நிருபத்தை எழுதினார்.

இவ்விரு நிருபங்களுக்குள் பல வேற்றுமைகள் இருப்பதை வேத அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். முதலாம் நிருபத்தைவிட இரண்டாம் நிருபம் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. முதலாம் நிருபத்தில் கர்த்தருடைய வருகை திருடனின் வருகையைப் போலிருக்கும். (1.தெச.5:2) என்றும் இரண்டவது நிருபத்தில் கர்த்தருடைய நாள் வருவதற்கு முன் சில காரியங்கள் நடைபெறும் (2 தெச.2:1-4) என்று பவுல் கூறுகிறார். முதல் நிருபம் தெசலோனிக்கே பட்டணத்து சபையிலிருந்த புற ஜாதிகளுக்கு எழுதப்பட்டது என்றும் இரண்டாம் நிருபம் அச்சபையிலிருந்த யூதர்களுக்கு எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

வேறுபாடுகள் பல இருப்பினும், உபத்திரப்படுகின்ற கிறிஸ்துவர்களை உற்சாகப்படுத்துவதாயும், மற்றவர்களை (யூதர்களை) கர்த்தரின் நாளைப் பற்றிக் கூறி எச்சரிப்பதாகவும் இந்நிருபங்களில் காணப்படுகின்றன. இனி வரும் சில நாட்கள் இந்நிருபங்களைப் பற்றி நாம் தியானிக்கும் போது உற்சாகமடைவோம். கர்த்தரின் நாளுக்காக ஆயத்தப்படுவோம்.

Friday, 5 August 2011

சீஷர்களின் மரணம்

இயேசுவின் சீஷர்கள் மரித்தது எப்படி?

அப். மத்தியா : யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக தெரிந்து கொள்ளப்பட்ட (அப் 1:26) இவர் கற்களால் எறியுண்டு பிறகு சிரைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அப்.யோவான் : வயது முதிர்ந்து நல்லபடி மரித்த ஒரே அப்போஸ்தலர் இவரே ஆகும்.

அப்.ததேயு : பெரிட்டஸ் என்ற இடத்தில் இரத்தசாட்சியாய் மரித்தார்.


அப். தோமா : இந்தியாவிலுள்ள சென்னைப் பட்டணத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அப்.சீமோன் : இவரை குறித்ததான சரியான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை இவரும் சிலுவையில் இரத்த சாட்சியாய் மரித்தார் என்று கருதுகின்றனர்.

அப். பற்தொலொமேயுச்: அர்மேனியாவில் உள்ள அல்லானும் என்றும் பட்டணத்தில் சவுக்கால் அடிக்கப்பட்டு, பிறகு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அப்.பிலிப்பு : டோமிட்டியன் காலத்தில் ஹீரப்போலிஸ் என்ற பட்டணத்தில் பேதுருவை போல தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அப்.அந்திரேயா, அக்காயா என்னப்படும் கிரேக்கப்பட்டணத்தில் ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டு X வடிவிலான சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

செபதேயுவின் குமாரனாகிய அப். யாக்கோபு பாலஸ்தீனாவில் ஏரோது அகிரிப்பா 1-ம் மன்னானால் ஏறக்குறைய கி.பி. 44-வது ஆண்டு சிரைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அல்பேயுவின் குமாரனான அப். யாக்கோபு தேவாலயத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு பிறகு கற்களால் எறியுண்டு இரத்தசாட்தியாய் மரித்தார்.

அப்.சீமோன் பேதுரு ரோம மாநகரில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சி மரித்தார் இயேசுவை போல மரிக்க தனக்கு தகுதியில்லை,அதனால் என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் வேண்டிக்கொண்டார். அப்படியே அறைந்தார்கள்.

அப்போஸ்தலனாகிய மத்தேயுவை எத்தியோப்பியாவில் சிறையாக்கி, அங்கே தரையோடு சேர்ந்து ஆணி அடித்தனர். அதன் பிறகு தலை வெட்டபட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

Thursday, 4 August 2011

கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும்

இஸ்ரவேலின் கடைசி நியாயாயிபதி யார் ?


எபிரெய வேதாகமத்தில் 1 & 2 சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாக இருந்தன. 16ம் நூற்றாண்டில் தான் சாமுவேல் இரண்டு புத்தகங்களாக பிரிக்கப்பட்டது. 1 சாமுவேல் இஸ்ரவேலரின் தலைமைப் பதவி, நியாயாதிபகளிடமிருந்து இராஜாக்களுக்கு மாறியதை விளக்குகிறது. கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும், இஸ்ரவேலின் முதல் அரசனான சவுலையும், அவனுக்குப் பின் அரசனான தாவீதையும் அபிஷேகம் செய்தவருமான சாமுவேலின் பெயர் இந்நூல்களுக்கு அளிக்கப்பட்டது பொருத்தமானதே.

Wednesday, 3 August 2011

"சொப்பனங்களின் தீர்க்கதரிசி"

"சொப்பனங்களின் தீர்க்கதரிசி" யார் ?



தானியேல் மாபெரும் ஜெபவீரர். சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும் வாழ்ந்தவர். தீர்க்கதரிசன வரம் பெற்றவர். "சொப்பனங்களின் தீர்க்கதரிசி" என்று இவர் அழைக்கப்பட்டார். தானியேல் என்றால் தேவன் என்னுடைய நீதிபதி (தேவன் எனக்கு நியாயம் செய்கிறவர்) என்று பொருளாகும். தானியேலைச் சிங்கக்கெபியில் போடும்போது அவர் சுமார் 90 வயதாயிருந்தார் என்பது குறிப்படத்தக்கது. தானியேல் வாழ்ந்த காலத்தில் தான் எசேக்கியேல் தீர்க்கதரிசியும் வாழ்ந்தார்.

Tuesday, 2 August 2011

உடன்படிக்கைப் பெட்டி

உடன்படிக்கைப் பெட்டி பற்றி கூறுக.


3 3/4 X 2 1/4 அடி X 2 1/4 அடி அளவிலான பெட்டி சீத்திம் மரத்தினால் செய்யப்பட்டு தங்கத்தினால் மூடப்பட்டிருந்தது. இதில் 10 கட்டளைகள் அடங்கிய 2 கற்பலகைகளும், மன்னா இருந்த பொற்பாத்திரமும், ஆரோனின் கோலும் இருந்தன. கிருபாசனம் என்ற முற்றிலும் பொன்னினால் செய்யப்பட்ட மூடியினால் இந்தப் பெட்டி மூடப்பட்டிருந்தது. அந்த மூடியோடே ஒரே வார்ப்பினால் செய்யப்பட்ட 2 கேருபீன்கள் அமைக்கப்படிருந்தன. 10 கட்டளைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் உள்ள பெட்டியின் மேல் கிருபாசனம் இருந்தது. இந்த அமைப்பானது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாகவும் கிருபையின் வெளிப்பாடாகவும் இருக்கிற கிறிஸ்துவுக்கு அடையாளமாக விளங்கினது.

Monday, 1 August 2011

அதிகாரப் பிரிவுகள்

வேதத்தில் அதிகாரப் பிரிவுகள் எப்போது பகுக்கப்பட்டது?


இன்று நாம் வேதத்தில் காணும் அதிகாரங்கள் மற்றும் வசன எண்கள் ஆகியவை கி.பி.1250 வரை இருக்கவில்லை. கி.பி.1250ல் தான் இப்படி வசனங்களுக்கு எண் கொடுத்தும், அதிகாரங்களுக்கு எண்ணிட்டும் பிரித்தார்கள். வேதத்தை இப்படி பிரித்தவர் கார்டினால் ஹ்யூகோ என்பவராவார். இவர் முதன் முதலில் லத்தீன் வேதாகமத்தில் தான் இதை உண்டாக்கினார்.தற்போதுள்ள அதிகாரப் பிரிவுகள் கி.பி.1553ல் தான் ஏற்படுத்த பட்டன. கிரேக்க மொழியின் வேதாகமத்தில் இப்பிரிவுகளை உண்டாக்கியவர் இராபர்ட் ஸ்டீபன் என்பவராவார்.

Sunday, 31 July 2011

மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலையும்

மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலையும் பற்றி கூறுக.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தேவன் மோசேக்கு காண்பித்து அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தில் பிரகாரம், வாசஸ்தலம், மகாபரிசுத்த ஸ்தலம் என்ற மூன்று முக்கியமான பகுதிகள் இருந்தன.மகாபரிசுத்த ஸ்தலம் என்கின்ற பகுதி, கூடாரத்தின் மேற்குப் பகுதியில் 15 அடி X 15 அடி X 15 அடி அளவில் திரைச் சீலைக்குப் பின்னாக அமைந்திருந்த பகுதி. இது தேவன் வாசம் செய்யும் இடத்திற்கு அடையாளமாக விளங்கியது. வருடத்திற்கு ஒரு முறைமட்டும் இதன் உள்ளே பிரதான ஆசாரியன் செல்லுவான். இதில் தான் உடன்படிகை பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. சித்திர வேலைகளான திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையிலே இருந்தது. கிறிஸ்து சிலுவையில் மரித்த போது தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. தேவனிடத்தில் சேர நமக்கு வழி ஏற்பட்டது. எபிரெயர் 9ம் அதிகாரத்தைப் படித்துப்பாருங்கள்

Friday, 29 July 2011

பர்னபா

பர்னபாவின் இயற்பெயர் யோசே என்பதாகும். சீப்புருத் தீவை செர்ந்த இவர் லேவிக்கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் துவக்க காலத்தில் தனக்கென்று வைத்திருந்த நிலத்தை விற்று அப்போஸ்தலருக்கு கொடுத்திருந்தார். பவுல் மனம் திரும்பி அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து கொள்ள வந்தபோது அவரைக்கு குறித்து அவர்கள் பயந்திருந்ததினால் அவரை சேர்த்துக்கொள்ள மனதாயில்லாதிருந்த போது பர்னபாதான் அவர்களது பயத்தைப் போக்கி பவுலை அப்போஸ்தலர்களுடன் ஒப்புரவாக்கி சேர்த்துக் கொள்ளும்படிச் செய்தார். மாற்குவைப் பற்றி பர்னபாவுக்கும், பவுலுக்கு உண்டான வாக்குவாதத்திற்குப்பின் இருவரும் சேர்ந்து தேவப்பணி செய்யவில்லையாயினும், பர்னபாவைப் பற்றி பவுல் தன் நிருபங்களில் மிக உயர்வாகவே எழுதியுள்ளார்.

Thursday, 28 July 2011

நான்கு சுவிசேஷங்களிலும்

நான்கு சுவிசேஷங்கள் பற்றிய குறிப்புகள்

நான்கு சுவிசேஷங்களிலும் மொத்தம் 89 அதிகாரங்கள் உள்ளன. அதில் 4 அதிகாரங்கள் அவருடைய முதல் 30 வருட வாழ்க்கையைப் பற்றியும், 85 அதிகாரங்கள் அவருடைய 3 வருட வாழ்க்கையைப் பற்றியும் 28 அதிகாரங்கள் அவருடைய கடைசி 8 நாள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன.

Wednesday, 27 July 2011

எஸ்ரா

எஸ்ரா என்றால் என்ன?


எஸ்ரா என்றால் 'உதவியாளர்' என்று பொருள். பாரம்பரியத்தின் படி வேதாகம புத்தகத்தில் எஸ்ரா என்ற நூலின் தலைமை பாத்திரமாக (Chief Character of the book) விளங்குகின்றான் ( எஸ்ரா 7:1,11,25,28, 8:15,16,17,21) .இவன் ஆரோனின் வழி வந்தவன். செரெயா என்பவனின் மகன் ( 7:1). திருமறையை ஆராய்ந்தவன். போதகன். இவன் இறைவனுக்குக் கீழ்படிதலுள்ள ஒரு சிறந்த கடவுள் மனிதன் ( 7:10). யூதர்களின் தலைவன்.பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து, அர்த்தசஷ்டா மன்னனின் காலத்தில் கி.மு.458 - ஆண்டு யூத மக்களை தலைமை தாங்கி எருசலேமுக்கு திரும்பிக் கொண்டு வந்தவன். இவன் காலத்தில் யூதமக்கள் பாபிலோனிய மன்னனின் தயவு பெற்று விளங்கினார்கள்.

Tuesday, 26 July 2011

அல்பா, ஓமெகா

அல்பா, ஓமெகா என்றால் என்ன?


வேதத்தில் நான்கு இடங்களில் அல்பா, ஓமெகா என்ற பதங்கள் காட்டப்பட்டுள்ளன. ( வெளி 1:8,1:11, 21:6,22:13 ). அதென்ன அல்பா, ஓமெகா?. அல்பா என்பது கிரேக்க மொழியுள்ள எழுத்துகளில் முதலாவது எழுத்தாகும். முதலெழுத்து மட்டுமல்ல. இது உயிரெழுத்தும் கூட. தமிழில் 'அ' என்பது போல. இது எபிரெய முதலெழுத்தான 'ஆலெப்' என்பதிலிருந்து மருவி வந்தது. ஓமெகா என்பது கிரேக்க மொழியின் கடைசி எழுத்து. முதலும் முடிவும் என்பதை குறிப்பிடவே அல்பா ஓமெகா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Monday, 25 July 2011

பிலிப்பி பட்டணம்

பிலிப்பி பட்டணம் பெயர் காரணம் என்ன?


மக்கெதேனியா நாட்டு அரசனும் மகா அலெக்சாண்டரின் தந்தையுமான பிலிப்பு இந்த நகரை கட்டியதால் இது அவருடைய பெயராலேயே பிலிப்பி பட்டணம் என்று அழைக்கப்பட்டது. கி.மு.168ல், இப்பட்டணம் ரோமரின் ஆதிக்கத்துக்குட்பட்டது. கி.பி.42க்கு பின் நடைபெற்ற சண்டைக்குப் பின் பிலிப்பி, ரோமர் குடியேறிய பட்டணமாக மாறியது. பிலிப்பி, மக்கெதோனியா தேசத்தின் நாடுகளில் முக்கியமான பட்டணங்களுள் ஒன்றாகும். அப்போஸ்தலர் நடபடிகள் 16:12ஐ வாசிக்கவும். பவுல் தமது இரண்டாவது மிஷினெரிப் பயணத்தின் போது இப்பட்டணத்திற்கு வந்து ஊழியம் செய்தார்.

Sunday, 24 July 2011

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி என்பதன் விளக்கம் என்ன?

தீர்க்கதரிசி - எபிரேய மொழியில் மூன்று சொற்கள்

1. நபி (Nabi ) - இச்சொல் திருமறையில் முந்நூறு முறைக்கும் அதிகமாக வருகிறது. தமிழ் திருமறையில் தீர்க்கதரிசி என்று மொழிபெயர்த்திருக்கும் இச்சொல்லின் மூலப்பொருள் தெரிவிக்கிறவன் அல்லது கூறுகிறவனாக இருக்கலாம்.

2. ரோகே (Roeh) - இச்சொல் திருமறையில் ஒன்பது முறை வருகிறது. இதன் மூலப்பொருள் காண்கிறவன் என்பதாகும். இச்சொல் திருமறையில் தமிழ்மொழியில் ஞான திருட்டிக்காரன் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

3. கோசே (Chozeh) : இச்சொல் திருமறையில் இருபது முறை வருகிறது. இதற்கு உரைக்கிறவன் என்று பொருள். இச்சொல் தமிழ்த் திருமறையில் ஞானதிருட்டிக்காரன் என்றும், தரிசனம் பார்க்கிறவன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Saturday, 23 July 2011

லூக்கா

லூக்கா என்பது யார்?

பவுலின் கண்டிப்பான உபதேசங்களை பின்பற்ற முடியாதவர்களாய் அநேகர் அவரை விட்டு விலகிப்போனார்கள். 1திமோ 1:20, 2 தீமோ 1:15, 2:17, 4:10,20. ஆகிலும் லூக்கா போன்றவர்கள் அவரை விட்டு விலகாமல் அவரோடு இணைந்திருந்தது மாத்திரமல்ல. ஒரு உண்மை தேவ ஊழியனாய் விளங்க பண்ணினான். அவன் யூத மார்க்கத்தை சேர்ந்தவனுமல்ல, கிரேக்க வம்சா வழி வந்தவன் என்று சபை சரித்திரம் சொல்கிறது. ரோமா புரியில் உயர் பதவியில் இருந்த தெயோப்பிலு போன்றவர்களோடு ஈடுபாடு கொண்டிருந்த லூக்கா ஒரு வைத்தியன்.

Friday, 22 July 2011

அந்திரேயா என்பது யார்?

மாற்கு எழுதின சுவிஷேசத்தில் உள்ள இயேசுவின் சீடர்கள் பட்டியலில் நான்காவது இடம் பெறும் பெயர் அந்திரேயா. அந்திரேயா என்ற கிரேக்க வார்த்தைக்கு மனிதத்தன்மை (Manly) என்ற பொருளுண்டு. கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தை சேர்ந்த அந்திரேயா, சீமோன் பேதுருவின் சகோதரன்.ஆனால், கப்பர் நகூமில் தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவோடு வாழ்ந்து வந்தான். பேதுருவைப் போல் மீன் பிடிக்கும் தொழிலை செய்தவன். யோவான் ஸ்நானன் "இதோ தேவா ஆட்டுக்குட்டி" என்று இயேசுவை அறிமுகம் செய்தபோது, யோவான் ஸ்நானனைப் பின் செல்வதை விட்டு இயேசுவைப் பின்பற்றலானான்.

Thursday, 21 July 2011

பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது

பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. -யோவான் 20:31 (புதிய ஏற்பாட்டில் பக்கம் 159)

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும் படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்கு போதனையாக எழுதியிருக்கிறது. -ரோமர் 15:4 (புதிய ஏற்பாட்டில் பக்கம் 223)

Wednesday, 20 July 2011

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமம் என்றால் என்ன?

இந்த உலகத்தில் உள்ள கணக்கிலடங்காத புத்தகங்களில், ஒரு புத்தகத்தை மட்டும் ஈடு இணையற்ற புத்தகம் என்று சொல்ல முடியும் என்றால் அந்தப் புத்தகம் பரிசுத்த வேதாகமம் ஆகும். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் புனிதமாய் போற்றும் வேதம் உண்டு. பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களின் வேதம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே படித்துப் பின்பற்ற வேண்டிய புனித நூல் பைபிள்.

பைபிள் என்ற வார்த்தை Bibilia (பிபிலியா) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாகும். இதன் பொருள் "புத்தகங்கள்" என்பதாகும். தலைசிறந்த புத்தகமாகிய பைபிள் 66 புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் இன்றைக்கு பேசப்படும் ஏறத்தாழ 5000 மொழிகளில் 2009 மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு புத்தகமாவது மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ஆதாரப்பூர்வமான ஒர் அறிக்கையின்படி 2 வாரங்களுக்கு ஒரு முறை மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய ஒரு குழு புதியதொரு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கிறார்கள். இயந்தரம் கொண்டு அச்சிடப்பட்ட முதல் புத்தகம் வேதாகமம்.


பரிசுத்த வேதாகமம் கடவுளைப் பற்றியும், மனிதனைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் பாவத்தின் பயங்கரமும் பரிசுத்தத்தின் மேன்மையும் விளக்கப் பட்டிருக்கிறது. பாவத்திலிருந்து மனிதனை மீட்க தேவன் வகுத்த திட்டத்தை பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது.

Monday, 18 July 2011

ததேயு

ததேயுவின் மறு பெயர்கள் என்ன?

மாற்குவின் சீடர் அட்டவணையில் பத்தாவதாக ததேயுவின் பெயர் வருகிறது. ததேயு புதிய ஏற்பாட்டில் மூன்று பெயர்களில் அழைக்கப்படுகின்றார். அவர் மாற்கு சுவிசேஷத்தில், ததேயு என்றும் (மாற்கு 3:18), லூக்கா சுவிசேஷத்திலும், அப்போஸ்தலர் நடபடிகளிலும் யாக்கோபின் சகோதரனாகிய யூதா என்றும் (லூக். 6:16; அப். 1:13), மத்தேயு சுவிசேஷத்தில் ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு என்றும் (மத். 10:3 ) அழைக்கப்படுகிறான். லெபேயு என்னும் வார்த்தை இருதயம் என்று அர்த்தபடும், லெப் (Leb) என்னும் வார்த்தையிலிருந்து வருகிறது.

Sunday, 17 July 2011

70

70 என்ற எண்ணின் சிறப்பு என்ன ?


இந்த எண் இஸ்ரவேலர் பாபிலோனில் செலவிடப்பட்ட சிறையிருப்பின் காலத்தைக் காட்டுகிறது. கி.மு.605இல் இருந்து கி.மு.536 வரை இஸ்ரவேலர் பாபிலோனில் கழித்தார்கள். தற்காலத்தின் ஈராக் நாடு இருக்கும் பகுதியில் தான் பாபிலோன் நாடு இருந்தது. இஸ்ரவேல் நாட்டிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் பாபிலோனிய நாடு இருந்தது. நாடு கடத்தப்பட்டு சிறையிருப்பின் கீழ் இஸ்ரவேலர் அனுப்பப்பட்டாலும், தேவனுடைய வார்த்தையின் படி அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினார்கள். இந்த சிறையிருப்புக் காலத்தில் தான் எசேக்கியேல், தானியேல் என்ற தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.

Saturday, 16 July 2011

குடிமதிப்பு

குடிமதிப்பு என்றால் என்ன?


தற்காலத்தில் குடிமதிப்பு (Census) எழுதுவது சர்வசாதாரணம். ரோம மன்னரான அகஸ்டஸ் சீசரால் தான் இக்காரியம் முதன்முதலாக முறையாக அமுல்படுத்தப்பட்டது. இதை வரிவிதிப்பதற்காகவே ஏற்படுத்தினான் அகஸ்டஸ். பதினான்கு ஆண்டிற்கு ஒருமுறை எழுதப்படும் இந்த குடிமதிப்பின்போது அவரவர் தங்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்பதுதான் கொஞ்சம் சிரமமான காரியம். இதனால் தான் யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் தங்குவதற்கு சிரமப்பட வேண்டியதாயிற்று. இயேசுவின் 14 வயது, 28 வயது ஆகியவற்றிலும் குடிமதிப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Friday, 15 July 2011

செங்கடலை கடந்தது எப்படி?

இஸ்ரேல் ஜனங்களை தேவன் செங்கடல் வழியாக வழி நடத்தினார். செங்கடலின் தண்ணீர் பிரிந்து இரண்டு பக்கமும் மதில் சுவராக நின்றது. கடலின் ஆழம் சுமார் நூறு அடி என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நூறு அடி தண்ணீர் வற்றியவுடன் இஸ்ரவேல் ஜனங்கள் நூறு அடி ஆழத்தில் இறங்கி பின் மேலே ஏறி வந்தார்களா? அப்படியானால் பிள்ளைகள் மிருக கீவங்கள் சகலவற்றையும் வைத்துக் கொண்டு அவ்வளவு பள்ளத்தில் இறங்கி பின் ஏறி வந்தது எப்படி?

யாத்திராகமம் 15:8 - உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்து போயிற்று.

நம் தேவன் எவ்வளவு ஆச்சரியமானவரும் நல்லவருமாய் இருக்கிறார் பாருங்கள் . கடலின் ஆழத்தில் உள்ள தண்ணீர் அப்படி பாறைக் கல்லைப் பூல உறைந்து போக செய்து விட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையில் நடப்பது போல் நடந்து சென்றார்கள்.

Thursday, 14 July 2011

மோசேயின் கற்பலகை

யாத்திராகமம் 31:18ம் வசனத்தில் சீனாய் மலையில் அவர் மோசேயோடே பேசி முடித்த பின் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை கொடுத்தார் என்று வாசிக்கிறோம். அந்த கற்பலகை இப்போது இருக்கிறதா?



தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகள் இப்போது இல்லை. ஏனென்றால் மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வரும் போது இஸ்ரேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக செய்து கொண்டிருந்த அக்கிரம செயல்களை பார்த்து கோபமூண்டவராகி தன் கையில் இருந்த பலகைகளை உடைத்துப் போட்டுவிட்டார். யாத்திராகமம் 32:19. பின்பு தேவனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு இரண்டு கற்பலகைகளை எடுத்துக் கொண்டு சீனாய் மலையின் மேல் ஏறி தேவன் தன்னிடம் சொன்ன கட்டளைகளை கற்பலகைகளில் எழுதினான்.

இந்த வார்த்தைகளை நீ எழுது. யாத்திராகமம் 34:27.

அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான். - யாத்திராகமம் 34:28.

இஸ்ரவேல் ஜனங்களின் அக்கிரம செய்கையால் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகையை நாம் இழந்து போனோம்.

Wednesday, 13 July 2011

விடுகதை 194

விடுகதை:
அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகருமாம் – ஆனால்
உலக்கையால் குத்தினாலும்
உரலிலே இருப்பானாம் -அவன் யார்?

விடை:
மூடன். நீதி 27:22.



Tuesday, 12 July 2011

விடுகதை 193

விடுகதை:
சுனாமி வந்தாலும் பயமில்லை
சுருட்டி எடுத்தாலும் பயமில்லை
எடுத்ததைக் கொடுத்தாலும்
கொடுத்ததை எடுத்தாலும்
சந்தோஷம் எனக்கு சந்தோஷமே -நான் யார்?

விடை:
ஆபகூக், ஆப 3:17,18.



Monday, 11 July 2011

விடுகதை 192

விடுகதை:
சிக்கன் வேண்டாம்
மட்டன் வேண்டாம்
சில்லி பீஃப் கொஞ்சமும் வேண்டாம்
பருப்பு, கீரை, காய்கறி போதும்
பலமாய் என்றும் வளருவோம் நாளும் -நாங்கள் யார்?

விடை:
தானியேல், அனனியா, மீஷாவேல் , அசரியா. தானி 1:1-20.



Sunday, 10 July 2011

விடுகதை 191

விடுகதை:
வயிற்றுப் பசி
கண்ணை மறைக்க
மண்ணை இழந்தான்
மதிகேடன் -அவன் யார்?

விடை:
ஏசா ஆதி 25:29-34.



Saturday, 9 July 2011

விடுகதை 190

விடுகதை:
எழம்ப முடியாத மனிதன்
முழங்கால் சண்டையில்
முழித்து எழுந்தான் -அது என்ன?

விடை:
விசுவாசமுள்ள ஜெபம், யாக் 5:14-16.



Friday, 8 July 2011

விடுகதை 189

விடுகதை:
கண் காணா தூரத்தில்
வெளிச்ச் அழகாய்
வீசுகின்றது – அது
மெதுவாய் இறங்கி வருகிறது. -அது என்ன?

விடை:
புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம், வெளி 21:10,11.



Thursday, 7 July 2011

விடுகதை 188

விடுகதை:
நீல நிறத் தண்ணீரில்
உறங்கி எழுந்தான்
புதிய மனிதன் -அது என்ன?

விடை:
ஞானஸ்நானம். கொலோ 2:12.



Wednesday, 6 July 2011

விடுகதை 187

விடுகதை:
சாத்தானின் வீட்டினிலே
சாத்தானுக்கு டாட்டா காட்டி
சாட்சியாய் வாழ்ந்து வந்த
உண்மையுள்ள உத்தமன் -அவன் யார்?

விடை:
அந்திப்பா. வெளி 2:13.



Tuesday, 5 July 2011

விடுகதை 186

விடுகதை:
பாவி எல்லாம் ஓடிவா பரிகாரம் கேட்க வா
தேங்காய் வேண்டாம் மாங்காய் வேண்டாம்
கோழி, கிடா எதுவும் வேண்டாம்
இரத்தம் சிந்தி மீட்ட அவர்
இன்றே உன்னை இரட்சிப்பார் -அவர் யார்?

விடை:
இயேசு கிறிஸ்து. அப் 16:31.



Monday, 4 July 2011

விடுகதை 185

விடுகதை:
ஏட்டிக்குப் போட்டி, ஏகப்பட்ட வாட்டி
காளையை மாட்டி, கண்டமட்டும் வெட்டி
ஆட்டமெல்லாம் ஆடி, பாட்டெல்லாம் பாடி
எலும்பையெல்லாம் காட்டி, சத்தமெல்லாம் கூட்டி
மாட்டி கொண்டனர் வெட்டிப்போட -அவர்கள் யார்?

விடை:
பாகால் தீர்க்கதரிசிகள். 1 இராஜா 18:22-40.



Sunday, 3 July 2011

விடுகதை 184

விடுகதை:
ஆண்டவரின் ஆலயத்தை
அழ்குப்படுத்தி பார்ப்பான்
அடியேன் கேட்பதாய்
அமைதியாய் சொல்லுவான்
அனைவருக்கும் மாதிரியான
அன்பான நண்பன் அவன் -அவன் யார்?

விடை:
சாமுவேல். 1 சாமு 3-10.



Saturday, 2 July 2011

விடுகதை 183

விடுகதை:
 இன்றே..
      இப்போதே..
      இந்த
      இல்லத்துக்கு
      இறைமகன்
      இயேசுவால்,
      இரட்சிப்பு வந்தது..
      இழந்ததை மீட்டது...
              - யாருடைய வீடு?
  விடை:
சகேயுவின் வீடு (யோவான் 19:9,10)


Friday, 1 July 2011

விடுகதை 182

விடுகதை:
அன்பானவர்
    அழகாய் தந்த
      அருமையான
        அச்சாரம்...
                        - அது என்ன?

விடை:
ஆவியென்னும் அச்சாரம் (2கொ 5:5)


Thursday, 30 June 2011

விடுகதை 181

விடுகதை:
காட்சிகள் மாறிடும்;
      காரணங்கள் தேய்ந்திடும்;
      காலங்கள் ஓடிடும்; (பகை)
      கானங்கள் பாடிடும்..   ஆனாலும்
      காத்துக் கொள்..
      காத்துக் கொள்..
      காலமெல்லாம்
      காத்துக் கொள்..
            -எதை?எதினால்?
     

விடை:
ஆத்துமாக்களை, பொறுமையினால் (யோவான் 21:19)


Wednesday, 29 June 2011

விடுகதை 180

விடுகதை:
பாம்புகளின் தலைவன்
பாலைவனத்தில் பிறந்தான்
பார்த்தவன் பிழைத்தான்
பாராதவன் மரித்தான் -அவன் பெயர் என்ன?

விடை:
நிகுஸ்தான். 2 இராஜா 1:4.



Tuesday, 28 June 2011

விடுகதை 179

விடுகதை:
யானைக்கு அடி சறுக்கும்
இவனுக்கோ முடி சறுக்கும் -அவன் யார்?

விடை:
சிம்சோன். நியாய 16:16-21.


Monday, 27 June 2011

விடுகதை 178

விடுகதை:
வேண்டாம் என்று சொன்னதை
வேண்டும் என்று கேட்கவே
கிடைத்தது பணம் சாக்கிலே
வந்தது நிறம் கதையிலே -அவன் யார்?

விடை:
கேயாசி. 2 இராஜா 5:20-27.


Sunday, 26 June 2011

விடுகதை 177

விடுகதை:
சாவுக்கு பயந்து ஓடி
ஊரை விட்டு வந்து
சூரைத் தஞ்சம் கொண்டு
அயர்ந்த நித்திரை செய்த
ஆண்டவரின் அடியான் -அவன் யார்?

விடை:
எலியா. 1 இராஜா 19:1-6.



Saturday, 25 June 2011

விடுகதை 176

விடுகதை:
கிடைத்ததற்கரிய செல்வத்தை
கையினில் வாங்கி
எறிந்து போட்டான் -அவன் யார்?

விடை:
மோசே. யாத் 32:15-20.


Friday, 24 June 2011

விடுகதை 175

விடுகதை:
உயரத்தை உரசிப் பார்த்தான்
அழகை அலசிப் பார்த்தான்
இஸ்ரவேலில் சிறந்து நின்றான்
பதவியைக் கண்டு ஒளிந்து கொண்டான் -அவன் யார்?

விடை:
சவுல். 1 சாமு 9:1; 10:22.